Pune - Lonavala [file image]
மகாராஷ்டிரா : புனேயில் ஸ்வப்னில் தாவ்டே என்ற இளைஞர், தனது ஜிம்மில் இருந்து 32 பேர் கொண்ட குழுவுடன், கடந்த சனிக்கிழமையன்று மும்பைக்கு மிக அருகில் உள்ள தம்ஹினி காட்டில் உள்ள நீர்வீழ்ச்சிக்குச் சென்றிருந்தார்.
அங்கு நீர்வீழ்ச்சியில் குதித்த ஸ்வப்னில் தாவ்டே, பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார் உடனடியாக தேடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவர் காணவில்லை. இதற்கு முன்னதாக, ஐந்து குடும்ப உறுப்பினர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது.
அந்த நபரின் 10 வயது மகள் தனது தந்தையின் செயல்களை கேளாமராவில் பதிவு செய்து கொண்டிருந்தது இறுதியில் சோகமாக மாறியது. அந்த வீடியோவில், தண்ணீர் கொட்டும் நீர்வீழ்ச்சியில் அந்த நபர் டைவ் செய்வதைக் காணலாம்.
அப்போது அவர் நீந்த முயற்சித்த போதிலும், அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இறுதியில் பாய்ந்தோடும் நீர் அவரை கீழ்நோக்கி இழுத்துச் செல்கிறது. லோனாவாலாவில் இருக்கும் நீர்வீழ்ச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் அடித்துச் செல்லப்பட்ட ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…
டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…
சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…
சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…
குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…