ஆதரவற்ற பெண் என ஏமாற்றி மறுமணம் செய்துவிட்டு, 6 லட்சம் பணத்துடன் தலைமறைவாகிய பெண்!

Published by
Rebekal
  • ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ள பெண் இளைஞனை ஏமாற்றி மறுமணம் செய்துள்ளார்.
  • மேலும் அவர்களது வீட்டில் இருந்து ஆறு லட்சத்தை வாங்கிக் கொண்டு தலைமறைவாகியுள்ளார்.

திருப்பதி அருகே உள்ள நரபுராஜூ கண்டரீகா எனும் பகுதியை சேர்ந்தவர் தான் 29 வயதுடைய சுனில் குமார். மார்க்கெட்டிங் ஊழியராக பணியாற்றி வரக்கூடிய சுனில் குமார் கடந்த 5 ஆண்டுகளாக சத்யநாராயண புரத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் சுனில்குமாருக்கு தனியார் நிறுவனத்தில் பணியாற்ற கூடிய சுகாஷினி என்னும் பெண்ணுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாற சுஹாசினி தான் ஆதரவற்றவர் என்று கூறியதால், கடந்த டிசம்பர் மாதம் சுனில் குமார் சுஹாசினியை தனது வீட்டை ஒப்புதலுடன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அதன் பின் சுனில் குமாரின் குடும்பத்தினர் அந்தப் பெண்மணிக்கு 20 கிராம் தங்க சங்கிலி ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளனர். சில நாட்களுக்கு பின் அந்தப் பெண்மணி தன்னை சிறுவயதில் வளர்த்தவர்களுக்கு தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், அவர்களை பார்க்க செல்வதாகவும் கூறியுள்ளார். மேலும், அந்த பகுதியில் திருமணத்திற்கு முன்பு கடன் வாங்கியதாகவும் அதற்காக 6 லட்சம் வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

குடும்பத்தினராக மாறிவிட்ட பெண்ணின் கடனை தீர்க்க வேண்டும் என்பதற்காக சுனில்குமார் குடும்பத்தினரும் 6 லட்சம் ரூபாய் கொடுத்து உள்ளனர்.ஆனால் அந்த பெண்மணி அதன் பின்பதாக ஒரேடியாக தலைமறைவாகி உள்ளார். இதனையடுத்து சுஹாசினியின் ஆதார் கார்டு மூலமாக விசாரித்ததில் அவர் நெல்லூரை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதும் தெரியவந்து உள்ளது.

அதன் பின்பு ஒரு நாள் சுஹாசினி சுனில்குமார் தொடர்பு கொண்டு தான் ஹைதராபாத்தில் இருப்பதாகவும், விரைவில் 6 லட்சம் ரூபாயை திருப்பி தந்து விடுவதாகவும் போலீசில் புகார்அளித்தால் பிரச்சினை செய்வதாகவும் மிரட்டியுள்ளார். மேலும் அவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து விட்டதாகவும், உண்மையை கூறியுள்ளார். இதனையடுத்து மனவேதனை அடைந்த சுனில்குமார் கடந்த சனிக்கிழமை இரவு அலிபிரி காவல் நிலையத்தில் சுஹாசினி மீது புகார் அளித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

2 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

3 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

3 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

4 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

4 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

5 hours ago