3 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் புதுச்சேரியில் திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்கப்படுகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு பல்வேறு தீவிரமான ஊரடங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்பொழுது புதுச்சேரியில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் புதுச்சேரியில் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த ஒன்றாம் தேதி புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள ஊரடங்கு தளர்வில், திரையரங்குகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று பிற்பகல் முதல் புதுச்சேரியில் உள்ள திரையரங்குகள் அனைத்தும் திரைப்படங்களை திரையிட தயாராக உள்ளது. இருப்பினும் தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால், வெளிநாட்டு திரைப்படங்கள், ஆங்கில திரைப்படங்கள் மற்றும் பழைய தமிழ் திரைப்படங்களே புதுச்சேரி திரையரங்குகளில் திரையிடப்படும் எனவும் கூறப்படுகிறது.
வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…