attacked gold shop [File Image]
ஹைதராபாத் : பர்தா அணிந்த இரண்டு மர்ம நபர்கள் நகைக்கடையில் உரிமையாளரை கத்தியை வைத்து தாக்கிவிட்டு நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி இருக்கிறது.
ஹைதராபாத் மேட்சல் நகரம் ஜகதம்பாவில் இருக்கும் நகைக்கடைக்கு இன்று இரண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பர்தா அணிந்துகொண்டு நகை வாங்கவந்தது போல உள்ளே நுழைந்தனர். கடையில் உரிமையாளர் மற்றும் வேலை பார்க்கும் மற்றோரு நபர் ஒருவரும் இருந்தனர். அப்போது பர்தா அணிந்துகொண்டு வந்த அந்த இருவரும் உரிமையாளரிடம் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
பிறகு திடீரென, இருவரில் ஒருவர் கையில் கொண்டு வந்த பெரிய கத்தி ஒன்றை எடுத்து கடையின் உரிமையாளரை மிரட்டி நகையை எடுத்து இந்த பைக்குள் போட்டு கொடு என்பது போல கேட்டுள்ளனர். அத்துடன் உரிமையாளரை கழுத்திற்கு பக்கத்தில் கத்தியை வைத்தும் குத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த உரிமையாளர் நகையை எடுத்துக்கோங்க என்பது போல பயத்தில் கூறியுள்ளார்.
ஒருவர் உரிமையாளரை மிரட்டி கொண்டு இருந்த நிலையில், மற்றோரு மர்ம நபர் நகையை தாங்கள் கொண்டு வந்த பைக்குள் எடுத்து வைத்துக்கொண்டு இருந்தார். பின் உரிமையாளர் இருவரையும் தள்ளிவிட்டு வெளியே தப்பித்து ஓடினார். உடனடியாக அந்த பார்த்த அணிந்து வந்த திருடர்களும் வெளியே ஓடி தாங்கள் வந்த பைக்கில் நகையை எடுத்து கொண்டு சென்றார்கள்.
அப்போது ஆத்திரத்துடன் கடையில் வேலை பார்த்து கொண்டு இருந்த அந்த நபர் கடையில் இருந்து சேரை எடுத்து அந்த நபர்களை தாக்கினார். கடையின் உரிமையாளரும் பைக்கில் சென்ற அவர்களை தொடர்ந்து சேரை எடுத்து தூக்கி எறிந்தார்.இருப்பினும், திருடிய அந்த மர்ம நபர்கள் பைக்கில் தப்பி சென்றார்கள். இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர் தாக்குதலால் உயிரிழந்த மற்றொரு அஜித்குமார் என்பவரின் குடும்பத்தினருக்கும் எடப்பாடி பழனிசாமி இன்று தொலைபேசி…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பர்மிங்ஹாமில்…
வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…