அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 நாள் பயணமாக வரும் 24-ம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். அவர் நேரடியாக அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை அதிபர் டெனால்ட் டிரம்ப் திறந்து வைக்க உள்ளார். இந்தியா வரவுள்ள டிரம்பிற்காக மத்திய அரசு சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றது. இது ஒரு பக்கம் இருக்க டிரம்ப்பின் தீவிர ரசிகர் ஒருவர் தான் டிரம்ப்பை சந்திக்க வேண்டும் என மத்திய அரசிற்கு கோரிக்கை ஒன்று வைத்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஜங்கனோன் நகரத்தை சேர்ந்த புஷா கிருஷ்ணா என்பவர் டிரம்ப்பின் தீவிர ரசிகர், இவர் டிரம்ப்பிற்க்காக சுமார் 6 அடி உயரமுள்ள சிலை ஒன்று அமைத்து அதற்கு தினமும் பால் அபிஷேகம், பூஜை என பல்வேறு வழிபாடுகளை நடத்தி வருகின்றார்.
இதுகுறித்து தெரிவித்த அவர் ட்ரம்ப் எனக்கு கடவுள் போன்றவர் அவருக்கு சிலை அமைக்க ஒரு மாதம் ஆனது என்றும், டிரம்ப் நீண்ட காலம் வாழ ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விரதம் இருந்து வருகின்றேன். பின்னர் தினமும் வேலையை துவங்கும் முன் டிரம்ப் படத்திற்கு பூஜை செய்து அவரை வழிபட்டு தான் எனது வேலையை தொடங்குவேன் என தெரிவித்தார். மேலும் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நல்ல உறவு இருக்க வேண்டும் என்று பூஜை செய்து வருகிறேன். இந்தியாவுக்கு வரும் ட்ரம்பை நான் சந்திக்க வேண்டும் அதற்காக மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் இவரை அனைவரும் ட்ரம்ப் கிருஷ்ணா என்று தான் அழைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…