Categories: இந்தியா

இந்த போராட்டம் 2 அரசியல் கட்சிகளுக்கு இடையேயான யுத்தம் அல்ல – ராகுல் காந்தி

Published by
பாலா கலியமூர்த்தி

நாட்டை காக்க பிரதமர் மோடிக்கு எதிரான செயல் திட்டத்தை உருவாக்கி வருகிறோம் என ராகுல் காந்தி பேட்டி.

கர்நாடக மாநிலம் பெங்களுருவில் இரண்டாவது எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்றும், இன்றும் நடைபெற்ற நிறைவு பெற்றது. இதன்பின் எதிர்க்கட்சிகள் கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் பேசினர். அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், இந்த போராட்டம் 2 அரசியல் கட்சிகளுக்கு இடையேயான யுத்தம் அல்ல, இந்தியாவின் சித்தாந்தத்தை பாதுகாக்கும் போராட்டம்.

இதுவரை வரலாற்றில், இந்தியாவின் கருத்தை யாராலும் எதிர்த்துப் போராட முடிந்ததில்லை என்பதை நாம் அறியலாம், இது இந்தியாவின் சித்தாந்தத்திற்கும் மோடிக்கும் இடையிலான யுத்தம். பாஜகவின் சித்தாந்தம் நாட்டை தாக்கும் நிலையில் அதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளோம். நாட்டை காக்க பிரதமர் மோடிக்கு எதிரான செயல் திட்டத்தை உருவாக்கி வருகிறோம்.

NDAக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா போராட வேண்டிய நிலையில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டவே இந்த பெயர். பாஜகவின் சிந்தனைக்கு எதிரான போர் இது. தேசத்தின் குரல் நசுக்கப்படுவதை தடுப்பதற்கான போர் இது. இந்தியாவின் மதச்சார்பின்மை மீது பாஜக கூட்டணி அரசு கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே, இந்த போர் இரண்டு வெவ்வேறு சித்தாந்தங்களுக்கு இடையேயானது எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

14 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

15 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

16 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

16 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

17 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

17 hours ago