பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று பஞ்சாப் அரசு அறிவிப்பு.
கடந்த ஆண்டு உலகையே அச்சுறுத்திய கொரோனா தொற்று, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதிலிருந்து மீள்வதற்குள் அடுத்தடுத்த அலைகள் தொடர்ந்து பல்வேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இந்தியாவில் கடந்த சில வாரங்களாக குறைந்து வந்தது. இதனால் பல மாநிலங்களில் தொற்று பரவல் குறைந்தது காரணமாக கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் வகையான நிறுவனங்களும் திறக்கப்பட்டன. குறிப்பாக முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதனால் மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை தவிர்த்து வந்தனர். ஆனால், மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்த தொடங்கியுள்ளது கொரோனா தொற்று, குறைந்து வந்த கொரோனா பரவல், மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, டெல்லி, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.
தமிழகத்திலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் அபராதம் விதிப்பதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது தவிர, முகக்கவசம் அணிவது குறித்து விலக்கு அளிக்கப்படவில்லை என மருத்துவத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், டெல்லி, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து பஞ்சாபிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பேருந்துகள், ரயில், விமான நிலையம், சினிமா ஹால், ஷாப்பிங் மால், வகுப்பு அறைகள், அலுவலக அறைகள் உள்ளிட்ட பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…