LIVE NEWS [ file Image ]
நிவாரணம் அறிவிப்பு:
கேரளாவில் படகு கவிழ்ந்து 22 பேர் பலியான சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என கேரளா முதல்வர் அறிவித்துள்ளார். விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட அவர் படகு விபத்து தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அனைவரின் செலவையும் அரசே ஏற்கும் என முதல்வர் பினராயி விஜயம் அறிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் வாழ்த்து:
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்று வாழ்க்கையின் மிக முக்கியக் கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள். தேர்ச்சி பெறாதவர்கள் மனம் தளர வேண்டாம். வெற்றிக்கு இன்னும் ஒரு அடிதான், நீங்களும் விரைவில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
துணைத்தேர்வு:
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான துணைத்தேர்வு, வரும் ஜூன் 19ஆம் தேதி தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத 47,934 மாணவர்கள் இந்த தேர்வுக்காக விண்ணப்பித்து அதில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
08.05.2023 12:15 PM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…
டெல்லி : இதுவரை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் இலவசமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜூலை 15,…
சென்னை : குணச்சித்திர நடிகர் ஜி.சீனிவாசன் உடல்நலக்குறைவால் சென்னையில் நெற்றிரவு காலமானார். இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறன்…
சென்னை : போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணையில், தமிழ் திரைப்பட நடிகர் கிருஷ்ணா மற்றும் போதைப்பொருள் சப்ளையர் எனக் கூறப்படும்…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…