மும்பை-புவனேஸ்வர் மார்க்கத்தில் செல்லும் லோக்மான்ய திலக் அதிவிரைவு ரயில் இன்று காலை கட்டாக்கில் உள்ள நெர்குண்டி ரெயில் நிலையம் அருகே தடம் புரண்டது. இன்று காலை சரியாக காலை 7 மணியளவில் இந்த கோர விபத்து ஏற்பட்டு உள்ளது. சலாகான் மற்றும் நெர்குண்டி இடையே ஒரு சரக்கு ரெயில் மோதியதில் அதிவிரைவு ரயிலின் எட்டு பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 40 பயணிகள் காயமடைந்துள்ளனர் என்றும் அதே நேரத்தில் இந்த விபத்தில் எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றனர். விபத்தில் காயமடைந்த பயணிகள் உள்ளூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த 5 பயணிகள் எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.இதற்கிடையில், மீட்புப் பணிகளை மேற்கொள்ள தீயணைப்புப் பணியாளர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்தை விரைந்துள்ளன. இந்த சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…