கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே தான் செல்கிறது. இதனால் சோதனையும் அதிகளவில் செய்யப்பட்டு வருகிறது அதனால் தான் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகமாக வருகிறது. இந்நிலையில் ஜூலை 5 வரை சோதனை செய்யப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 99,69,662 ஆக உள்ளது இதில் 1,80,596 மாதிரிகள் நேற்று மட்டும் பரிசோதிக்கப்பட்டனஎன இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 23 ஆயிரத்தை கடந்து கொரானா பாதிப்பு சென்று கொண்டுள்ளது. மேலும் 400க்கும் மேற்பட்டோர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர் உலகம் முழுவதும் கொரானாவின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை 1.15 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 697,836 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 19,700 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 23,932 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரே நாளில் 421 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தவர்கள் தவிர இதுவரை 424,891 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 253,245 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…