காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் பொதுமக்கள் வாகனம் மீது தாக்குதல்! சாதுர்யமாக செயல்பட்ட வாகன ஓட்டுநர்!

Published by
மணிகண்டன்

காஷ்மீரில் உள்ள ராம்பன் மாவட்டத்தில் படோத் எனும் ஊரில் பொதுமக்கள் தனியார் வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, குறுக்கே இரண்டு பயங்கரவாதிகள் அந்த பேருந்தை பயங்கர ஆயுதங்களுடன் தாக்க முற்பட்டனர். ஆனால், அந்த வாகனத்தை ஓட்டிவந்தவர் சற்றும் பயப்படாமல் வாகனத்தை வேகமாக ஓட்டி அங்கிருந்து தப்பித்துச் சென்றார். மேலும், இதுகுறித்து ராணுவத்திற்கு தகவலும் அளித்தார்.

இந்த தகவலை அடுத்து அந்த இடத்திற்கு குயிக் ரியாக்ஷன் டீம் எனப்படும் அதிவிரைவு படை ராம்பன் பகுதியை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டு அந்த பயங்கரவாதியிடமிருந்து பல ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சற்றும் பயங்கரவாதிகளை கண்டு பயப்படாமல் துரிதமாக செயல்பட்டு பொதுமக்களை காப்பாற்றி, அதே நேரத்தில் ராணுவத்திற்கும் தக்க சமயத்தில் தகவல் கொடுத்த அந்த ஓட்டுநரை இராணுவத்தினர் பாராட்டி வருகின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது திமுக, மீனவர்கள் மீது அக்கறையில்லை” – இபிஎஸ் விமர்சனம்!

“கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது திமுக, மீனவர்கள் மீது அக்கறையில்லை” – இபிஎஸ் விமர்சனம்!

சென்னை : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…

8 hours ago

“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று…

9 hours ago

பீகாரில் ஆகஸ்ட் 1 முதல் இலவச மின்சாரம் – நிதிஷ்குமார் அறிவிப்பு.!

பீகார் : இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ் அரசு…

9 hours ago

எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!

டெல்லி : கடந்த மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். அதில்…

9 hours ago

ரயிலில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம்: பாஜகவினர் பணப்பட்டுவாடா செய்தது உறுதி – சிபிசிஐடி.!

நெல்லை : 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்,…

10 hours ago

‘ஹாரி பாட்டர்’ நடிகைக்கு வாகனம் ஓட்ட இடைக்கால தடை.! ஏன் தெரியுமா.?

லண்டன் : 'ஹாரி பாட்டர்' படத் தொடரில் ஹெர்மியோன் கிரேன்ஜர் வேடத்தில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன்…

10 hours ago