14வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இரண்டு பேர்.! மறுத்ததால் எரித்து கொலை.!

Published by
Ragi

14 வயது சிறுமி  மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த திங்களன்று சட்டீஸ்கர் மாநிலத்தில் பெமேடாரா மாவட்டத்தை சேர்ந்த 14வயது சிறுமி வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள வயலில் இருந்த போது அவரது பள்ளியில் படித்தவர்களான 22வயது மற்றும் 13 வயதுடைய இரண்டு பேர் அவரிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த சிறுமியை இருவரும் மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பிடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. அதனையடுத்து உடனடியாக சிறுமியை கிராமத்தில் உள்ள உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் உடல்நிலை மோசமானதால் அங்கிருந்து ராய்ப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அப்போது அந்த சிறுமி தனது கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக போலீசாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதனையடுத்து சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி கடந்த புதன்கிழமை காலமானார். அங்கு அவரது அறிக்கையை நிர்வாக மாஜிஸ்திரேட் பதிவு செய்துள்ளார். அந்த அறிக்கையின் படி ஐபிசி மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல் என்ற போக்ஸோ சட்டத்தின் கீழ் ராய்ப்பூர் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டு, வழக்கு பெமேடாராவில் உள்ள காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டு குழந்தையை கொன்ற குற்றவாளிகளான இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Published by
Ragi

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

3 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

3 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

4 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

4 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

5 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

6 hours ago