14வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இரண்டு பேர்.! மறுத்ததால் எரித்து கொலை.!

Published by
Ragi

14 வயது சிறுமி  மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த திங்களன்று சட்டீஸ்கர் மாநிலத்தில் பெமேடாரா மாவட்டத்தை சேர்ந்த 14வயது சிறுமி வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள வயலில் இருந்த போது அவரது பள்ளியில் படித்தவர்களான 22வயது மற்றும் 13 வயதுடைய இரண்டு பேர் அவரிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த சிறுமியை இருவரும் மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பிடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. அதனையடுத்து உடனடியாக சிறுமியை கிராமத்தில் உள்ள உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் உடல்நிலை மோசமானதால் அங்கிருந்து ராய்ப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அப்போது அந்த சிறுமி தனது கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக போலீசாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதனையடுத்து சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி கடந்த புதன்கிழமை காலமானார். அங்கு அவரது அறிக்கையை நிர்வாக மாஜிஸ்திரேட் பதிவு செய்துள்ளார். அந்த அறிக்கையின் படி ஐபிசி மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல் என்ற போக்ஸோ சட்டத்தின் கீழ் ராய்ப்பூர் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டு, வழக்கு பெமேடாராவில் உள்ள காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டு குழந்தையை கொன்ற குற்றவாளிகளான இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Published by
Ragi

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

8 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

8 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

9 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

10 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

12 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

13 hours ago