மேற்கு வங்க மாநிலத்தில் மத்திய அமைச்சர் முரளிதரன் கார் மீது கிராம மக்கள் கற்கள், கட்டைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் மேற்கு மிட்னாப்பூர் அருகே பஞ்ச்குடி கிராமத்துக்கு ஆய்விற்காக சென்ற மத்திய அமைச்சர் முரளிதரன் கார் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த கிராமத்துக்கு வந்த அமைச்சரின் கார் மீது பொதுமக்கள் கற்கள் வீசியும், கட்டை கம்புகளால் தாக்கியும் அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.
அங்கிருந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் பாதுகாப்பு வாகனங்களையும், பாதுகாப்பு அதிகாரிகளையும் தாக்கியதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த தாக்குதலில் அமைச்சரின் கார் கண்ணாடி உடைந்ததை அடுத்து தனது பயணத்தை பாதியிலேயே முடித்து கொண்டு திரும்பினார்.
இந்த தாக்குதலுக்கு ஜேபி நட்டா மற்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, மேற்குவங்க தேர்தலுக்கு பிறகு கடுமையான வன்முறை நிகழ்ந்து வருகிறது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர், பாஜக தொண்டர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பல பகுதிகளில் ஏற்பட்டுயிருந்தது.
இதில் 14க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இதனைத்தொடர்ந்து பாஜக தொண்டர்கள் மீது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று கூறி, நேற்று நாடு முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர் என்பது குறிப்பித்தக்கது.
சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…