9 நாட்களாக எதிர்க்கட்சிகள் கூட்டத்தொடரை வீணடித்து விட்டனர்.! விவாதிக்க அரசு தயார்.! மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேச்சு.!

Published by
மணிகண்டன்

2 நாள் விடுமுறைக்கு பின்னர் இன்று மீண்டும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்கியது. மக்களவை மாநிலங்களவை என இரு அவைகளிலும் அவை துவங்கியதும், எதிர்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக  விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டனர்.

மத்திய அமைச்சராகவும், மாநிலங்களவை அவைத்தலைவராகவும் இருக்கும் பியூஷ் கோயல் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் பேசுகையில் எதிர்க்கட்சிகள் அமளி குறித்து விமர்சித்தார். ‘

மேலும் அவர் கூறுகையில், மணிப்பூர்  கலவரங்கள் தொடர்பான விவாதம் இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெற வேண்டும். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவர்கள் வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.

மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது. ஆனால் எதிர்க்கட்சியினர் நாடளுமன்றத்தை தொடர்ந்து 9 முக்கிய நாட்களாக வீணடித்து விட்டனர்.

இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்பார்த்த மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் பற்றிய விவாதம் எப்போது நடைபெறும் என அறிவிக்கப்படும் என எதிர்பார்த்தனர்.

இதற்காக மணிப்பூர் களநிலவரம் குறித்து தெரிந்து கொள்ள நேற்று முன்தினம் மற்றும் நேற்று என இரண்டு நாள் பயணமாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூர் சென்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

10 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

11 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

12 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

12 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

13 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

13 hours ago