நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம்.! மத்திய அமைச்சர் விளக்கம்… எதிர்க்கட்சிகள் கடும் அமளி..!

Published by
மணிகண்டன்

நாடாளுமன்றத்தில் நேற்று பார்வையாளர் அரங்கில் இருந்து இருவர் மக்களவைக்குள் குதித்தனர். பாதுகாப்பு வளையத்தை தாண்டி அவர்கள் மறைத்து வைத்து இருந்த வண்ணப்பூச்சிகளை வெளிப்படுத்தினர். மேலும் அதே சமயத்தில் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு பெண் ஒரு இளைஞர் என இருவர் அதே போல வண்ணப்பூச்சிகளை வெளிப்படுத்தி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து கேள்வி பன்மடங்கு அதிகரித்தது.

நாடாளுமன்றத்தில் அத்துமீறல்.! தொடரும் கைது நடவடிக்கைகள்… ஒருவர் தப்பியோட்டம்.!

நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து நேற்றே நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கடும் அமளி ஏற்பட்டது. அதே போல இன்று கூட்டத்தொடர் தொடங்கியது முதலே எதிர்கட்சிகள் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். புதிய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது . பழைய நாடாளுமன்றத்தில் இதுபோல நடைபெற்றது இல்லை. இதற்கு  பிரதமர் மோடி பொறுப்பேற்க  வேண்டும்

பாதுகாப்பு குறைபாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். என கோஷங்கள் எழுப்பினர். இதற்கிடையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார். அதில், நாடாளுமன்ற பாதுகாப்பு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்டும் . பாதுகாப்பு உறுதி செய்யப்படும். என தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நாடாளுமன்ற முழு பாதுகாப்புக்கும் பொறுப்பு நான் தான். இது தொடர்பாக நான் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அத்துமீறல் தொடர்பாக இத்வரை 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  இதனை தொடர்ந்தும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்ட காரணத்தால் மக்களவை மதியம் 2 மணிவரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மக்களவைக்குள் உள்ளே குதித்தது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் மற்றும் உத்திர பிரதேசத்தை சேர்ந்த சாகர் சர்மா. பாராளுமன்றத்திற்கு வெளியே  கோஷமிட்டவர்கள் ஹரியானா, ஜிந்தூரை சேர்ந்த நீலம் எனும் மாணவி மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரை சேர்ந்த வேலையில்லா பட்டதாரி அமோல். இவர்கள் கோஷம் போடுவதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவர்  லலித்.  இவர்கள் அனைவருக்கும் டெல்லி குருகிராமில் தங்க இடம் அளித்தது விஷால் சர்மா எனும் ஆட்டோ ஓட்டுநர் என அனைவரும் கண்டறியப்பட்டனர். இதில் லலித் தவிர அனைவரும் கைது செய்ப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளனர். லலித்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Recent Posts

குஜராத் பால விபத்து- பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு!

குஜராத் : மாநிலத்தில் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த காம்பிரா-முக்பூர் பாலத்தின் ஒரு…

56 minutes ago

எல்.எல்.பி. சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (TNDALU), 2025-2026 கல்வியாண்டிற்கான 3 ஆண்டு எல்.எல்.பி. (LL.B) சட்டப்படிப்பு…

2 hours ago

தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (11-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

2 hours ago

பூமி திரும்பும் சுபான்ஷு சுக்லா குழு…உற்சாகமாக வரவேற்க நாசா ஏற்பாடு!

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா மற்றும் ஆக்சியம்-4 (Ax-4) பயணக் குழுவினர், சர்வதேச…

2 hours ago

சரிவை சந்தித்த எலான் மஸ்க் சொத்து மதிப்பு! என்ன காரணம்?

வாஷிங்டன் : அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், “அமெரிக்கா கட்சி” (America Party) என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக…

3 hours ago

கோவாவில் ராட்வீலர், பிட்புல்ஸ் நாய் இனங்களுக்கு தடை – அமைச்சரவை ஒப்புதல்!

கோவா : ஜூலை 9 அன்று, கோவா அமைச்சரவை, ராட்வீலர் மற்றும் பிட்புல்ஸ் உள்ளிட்ட “கொடூரமான” நாய் இனங்களின் இறக்குமதி,…

3 hours ago