சேத்தன் சவுகானை நினைவுகூறும் விதமாக அவர் பெயரை ஒரு சாலைக்கு வைக்கவுள்ளதாக உத்தரபிரதேச மாநிலத்தின் துணை முதல்வர் அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் கிரிக்கெட் வீரருமான சேத்தன் சவுகான் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குருகிராமில் உள்ள மேடந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி உயிரிழந்தார். சேத்தன் சவுகான், சிவில் பாதுகாப்பு மற்றும் பிராந்தியா ரக்ஷக் தால் போன்றவற்றின் உத்தரபிரதேச அமைச்சராக இருந்தார். இவர் 1970-களில் கிரிக்கெட் அணியில் சுனில் கவாஸ்கருடன் தொடக்க ஆட்டக்காரரான சவுகான் களம் இறங்குவார்.
இந்நிலையில், சேத்தன் சவுகானை நினைவுகூறும் விதமாக அவர் பெயரை ஒரு சாலைக்கு வைக்கவுள்ளதாக உத்தரபிரதேச மாநிலத்தின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா அறிவித்துள்ளார். மேலும், சேத்தனின் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், அவர் பெயரை சாலைக்கு வைப்பதன் மூலம் தற்போது இருக்கிற மற்றும் வருங்கால சந்ததிகளுக்கு அவரை நினைவு கூறும் என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே, சேத்தன் சவுகான் மறைவு அம்மாநிலம் காட்டிய அலட்சியத்தால் உட்பட்டது என்று ஒருபக்கம் புகார்கள் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…