18 மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட இளம்பெண் உயிருடன் மீட்பு

Published by
மணிகண்டன்

உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட இளம்பெண் உயிருடன் மீட்கப்பட்டார். செய்யாத அந்த கொலைக்காக அப்பெண்ணின் தந்தை உட்பட 3 பேர் ஒருவருட சிறை தண்டனை அனுபவித்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள மலாப்பூர் கிராமத்தில் வசித்து வந்த ராகுல் கடந்த 2019ஆம் ஆண்டு, பிப்ரவரி 6 ஆம் தேதி தனது சகோதரியை காணவில்லை என கூறி, ஆதாம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இத புகாரின் அடிப்படியில், அந்த பெண் கொலைசெய்யப்பட்டதாகவும், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதம், துணிகள் ஆதாரங்களாக கிடைத்ததன் பெயரில், தந்தை சுரேஷ், சகோதரர் ரூப் கிஷோர், அண்டை கிராமத்தில் வசித்து வரும் தேவேந்திரா உள்ளிட்ட 3 பேரை ஆதாம்பூர் போலீசார் 2019 பிப்ரவரி 18 அன்று கைது செய்தனர். ஒரு வருடத்திற்கு மேலாக சிறை தண்டனையும் அனுபவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், ராகுல், காணாமல் போன தனது சகோதரியை பவுரா கிராமத்தில் சகோதரியின் காதலரான ராகேஷின் வீட்டில் இருப்பதை அண்மையில் கண்டுபிடித்தார். இந்த தம்பதியருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. மேலும், அந்த பெண் தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.

இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் சகோதரர் ஆதாம்பூர் காவல்நிலைய அதிகரிகளுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று நபர்களும் போலீசாரால் தாக்கப்பட்டு பின்னர் குற்றத்தை ஒப்புக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.

தனது சகோதரி காணாமல் போன வழக்கை பொய்யான கொலை வழக்காக மாற்றி தனது குடும்ப உறுப்பினர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்ட ஆதம்பூர்  காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராகுல் கோரிக்கை விடுத்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

27 minutes ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

56 minutes ago

ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – செனட் மசோதாவுக்கு ஒப்புதல்.!

வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…

1 hour ago

உயரும் Ola, Uber கட்டணம்.., புதிய விதிகள் என்ன.? மத்திய நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு.!

டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…

2 hours ago

அஜித் சம்பவம் போல் மற்றொரு அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.., இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்.!

தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…

2 hours ago

“ChatGPT-ஐ அதிகம் நம்ப வேண்டாம், இந்த உண்மையைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” – சாம் ஆல்ட்மன்.!

வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…

2 hours ago