#Breaking: உத்தரகண்ட் அரசியலில் திடீர் திருப்பம்.. முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ராஜினாமா!

Published by
Surya

உத்தரகண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், தனது முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். உட்கட்சி பிரச்சனை தொடர்பாக முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

உத்தரகண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வருடம் உள்ள நிலையில், அங்கு உள்கட்சியில் சில குழப்பங்கள் இருந்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து அக்கட்சியில் எம்.எல்.ஏ.க்கள், முதல்வர் மீதான குற்றச்சாட்டுக்களை பாஜக தலைமை அலுவலகத்திற்கு புகாரளித்தனர்.

இதன்காரணமாக இன்று டெல்லியில் பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவா்களை முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் சந்தித்தார். அதன்பின் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், ஆளுநர் பேபி ராணி மயூரியாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இந்தாண்டு இறுதியில் உத்தரகண்ட் மாநிலத்தில் சட்டபேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் ராஜினாமா செய்துள்ளது, திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அடுத்த முதல்வராக யார் இருக்கப்போகிறார் என்பது குறித்த ஆலோசனை, விரைவில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Published by
Surya

Recent Posts

ஈரான் அரசு தொலைக்காட்சி அலுவலகத்தை நொறுக்கிய இஸ்ரேல்.! தாக்குதலின் நேரடியாக ஒளிபரப்பு காட்சி..,

ஈரான் அரசு தொலைக்காட்சி அலுவலகத்தை நொறுக்கிய இஸ்ரேல்.! தாக்குதலின் நேரடியாக ஒளிபரப்பு காட்சி..,

இஸ்ரேல் : ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு…

6 hours ago

மதிமுக அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர் கல் வீச்சு தாக்கியதால் பரபரப்பு.!

சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல்…

6 hours ago

மேடையில் திடீரென ஒலித்த BEEP சப்தம்.., உரையை முடிக்கச் சொல்லி அலாரமா? – ஜெகதீப் தன்கர் கலகல…,

புதுச்சேரி : குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 3 நாள் பயணமாக நேற்றைய தினம் புதுச்சேரி சென்றார். இன்று…

6 hours ago

ஐசிசி மகளிர் உலக கோப்பை – அட்டவணை வெளியீடு.!

பெங்களூர் : இந்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை நடத்தும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐ.சி.சி அறிவித்துள்ளது.…

7 hours ago

TNPL : பந்தை சேதப்படுத்தியதாக அஸ்வின் மீது பரபரப்பு புகார்.!

மதுரை : தமிழ்நாடு பிரீமியர் லீக்தொடரில் சீனியர் வீரரான அஸ்வின் நிதானமிழந்து செய்த காரியங்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்த…

8 hours ago

இஸ்ரேல் தாக்குதல்.., ஈரான் தலைநகரில் இருந்து இந்தியர்கள் வெளியேற உத்தரவு.!

ஈரான் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளது.…

9 hours ago