வீட்டில் இருந்தபடியே மாற்று திறனாளிகளுக்கு தடுப்பூசி – மத்திய அரசு!

Published by
Rebekal

மாற்று திறனாளிகளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் கொரோனாவின் தீவிரத்தை ஒழிக்கும் விதமாக மும்முரமாக தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாற்று திறனாளிகளுக்கும் நடக்க முடியாதவர்களுக்கும் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண் அவர்கள் நேற்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அப்பொழுது மாற்றுத்திறனாளிகள் மற்றும் நடமாட முடியாதவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும் எனவும், 18 வயதுக்கு மேற்பட்டோரில் இதுவரை 66 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியையாவது எடுத்துக் கொண்டு உள்ளதாகவும், 23 சதவீதம் பேர் இரண்டாவது டோஸும் எடுத்து கொண்டுள்ளதாகவும், இது இந்தியாவின் முக்கியமான மைல்கல் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இங்கிலாந்து செல்லும் இந்தியர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டாலும், அவர்கள் பத்து நாள் கட்டாய தனிமைப்படுத்தப்படுவார்கள் எனும் புதிய விதி மிகவும் பாரபட்சமானது எனவும், அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இங்கிலாந்துக்கு அதே பாணியில் தக்க பதிலடி கொடுக்கும் உரிமை நமக்கு உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…

56 minutes ago

அமெரிக்கா தாக்கியதில் எங்கள் அணு உலை மையங்கள் ரொம்ப சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…

2 hours ago

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…

2 hours ago

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

3 hours ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

3 hours ago

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…

3 hours ago