கோவிலுக்குள் நுழைந்த சைவ முதலை – 70 ஆண்டுகளில் இதுவே முதல் முறை.!

Published by
Rebekal

கேரளாவில் உள்ள கோவிலுக்குள் நுழைந்த சைவ முதலை பூசாரி சொன்னதும் குளத்துக்குள் சென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் ஏரியின் நடுவே உள்ள அனந்தபத்மநாப ஸ்வாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. 70 ஆண்டு காலமாக இந்த ஏரியில் ஒரு முதலை வசித்து வருவதாக அங்குள்ள மக்கள் கூறியுள்ளதுடன், அந்த முதலையை பபியா எனவும் பெயரிட்டு மக்கள் அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த முதலை இதுவரை ஏரியில் இருந்து அந்த கோவிலுக்குள் வந்ததே கிடையாதாம். ஆனால் முதன்முறையாக நேற்று முன்தினம் இந்த முதலை கோவிலுக்குள் நுழைந்து உள்ளது. இந்த முதலை அசைவம் எதுவுமே சாப்பிடாமல், வெறும் சைவ உணவுகளை மட்டும் தான் சாப்பிடுமாம். மேலும் கோவில் பிரசாதத்தை இது விரும்பி சாப்பிடும் எனவும் பலர் கூறிவருகின்றன.
இது அசைவ உணவுகள் சாப்பிடாத முதலை என்றாலும் 70 ஆண்டு பழமையான பெரிய முதலை என்பதால் கோவில் வளாகத்திற்குள் நுழைந்ததும் அங்கிருந்த அனைவரும் பயந்து அலறி உள்ளனர். ஆனால் அந்த முதலையை கோவில் பூசாரி சந்திரபிரகாஷ் நம்பீசன் என்பவர் உள்ளே போ என லேசாக அதட்டியபடி கூறியதும் உடனடியாக அந்த முதலை விறுவிறுவென ஏரிக்குள் இறங்கி விட்டதாம். பூசாரியின் சொல்லுக்கு முதலை உடனடியாக கட்டுப்பட்டது அங்கு உள்ள பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
Published by
Rebekal

Recent Posts

பெரியார் – அண்ணா குறித்து விமர்சனம் – இந்து முன்னணிக்கு ஓ.பி.எஸ். கண்டனம்.!

பெரியார் – அண்ணா குறித்து விமர்சனம் – இந்து முன்னணிக்கு ஓ.பி.எஸ். கண்டனம்.!

சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…

33 minutes ago

திருப்பூரில் பரபரப்பு: இந்து முன்னணி பிரமுகர் நடுரோட்டில் வெட்டிக்கொலை.!

திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…

47 minutes ago

“சினிமாவில் பல நாட்களாக போதைப்பொருள் உள்ளது” – நடிகர் விஜய் ஆண்டனி பளிச்.!

சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…

59 minutes ago

ரிஷப் பண்ட்-க்கு போட்டி கட்டணத்தில் 50% அபராதம் – ஐசிசி அதிரடி.!

லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…

1 hour ago

“இந்தியரின் விண்வெளி பயணம் திட்டமிட்டபடி நடைபெறும்” – ஸ்பேஸ் எக்ஸ்.!

அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…

2 hours ago

Ostrava Golden Spike : ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நீரஜ் சோப்ரா.!

மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…

3 hours ago