தூக்கு தண்டனையை ரத்து செய்ய தன்னைத்ததானே காயப்படுத்திய வினய் ஷர்மா.!

Published by
Dinasuvadu desk
  • நிர்பயா குற்றவாளிகளுக்கு வருகின்ற மார்ச் 3-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.தூக்கு தண்டனையை ரத்து செய்ய குற்றவாளிகள் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர்.
  • கடந்த 16-ம் தேதி குற்றவாளி வினய் ஷர்மா சுவரில் தனது தலையை மோதி கொண்டு தன்னைத்ததானே காயப்படுத்தி கொண்டார்.

கடந்த  2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக குற்றவாளிகளாக ராம்சிங், ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங்  திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மீதமுள்ள நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் கடந்த 1-ம் தேதி காலை 6 மணிக்கு சிறையில் தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஆனால் குற்றவாளிகள் புதிய மனுக்கள் தாக்கல் செய்ததால் தூக்கு தண்டனையை ஒத்திவைத்தது டெல்லி நீதிமன்றம்.

இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மா தனது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். அவரது மனுவை ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.

பின்னர்  வினய் ஷர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  இதையெடுத்து குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தூக்கு தண்டனையை ரத்து செய்ய குற்றவாளிகள் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். அதில் திகார் சிறையில் இருக்கும் வினய் ஷர்மா கடந்த 16-ம் தேதி சுவரில் தனது தலையை மோதி கொண்டு காயத்தை ஏற்படுத்திக்கொண்டார். பின்னர் அவரை மீட்டு சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மேலும் இது போன்று குற்றவாளிகள் 4 பேரும் தற்கொலை முயற்சியில் ஈடுபடக் கூடாது என்பதற்காக அவர்கள் அறையில் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

5 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

6 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

6 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

7 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

7 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

9 hours ago