Virat kohli [Image source : EPA Images]
பெங்களூருவில் கொலை குற்றவாளியை கண்டுபிடிக்க விராட் கோலி போஸ்டர் உதவியுள்ளது.
பெங்களூருவில், மகாலட்சுமி நகர் பகுதியில் வசித்து வந்த 82 வயதான கமலா எனும் மூதாட்டி சில தினங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டார். மூதாட்டி கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையை தொடர்ந்தனர்.
அப்போது சிசிடிவி கேமிரா ஆய்வு செய்த போது நம்பர் பிளேட் இல்லாமல் ஓர் ஆட்டோ சந்தேகப்படுபடியாக இருந்துள்ளது. அதனை பார்த்த போலீசார் அந்த ஆட்டோவில் கிங் கோலி என இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி புகைப்படம் ஒட்டப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதனை கொண்டு ஆட்டோவை கண்டுபிடித்து கொலையாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தங்களது கடன்களை அடைப்பதற்க, சித்தராஜு, அசோக், அஞ்சனாமூர்த்தி ஆகியோர் கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட கமலா எனும் மூதாட்டி வீட்டிற்கு பிளம்பிங் வேலை செய்ய அசோக் சென்று, மூதாட்டி தனியாக இருப்பதை மற்ற இருவரிடமும் கூறி திட்டம் தீட்டி உள்ளார்.
அதன் பிறகு அஞ்சனாமூர்த்தி ஆட்டோ நம்பர் பிளேட்டை அகற்றியுள்ளார். சம்பவத்தன்று, மூவரும் சேர்ந்து மூட்டையை கொலை செய்து அங்குள்ள நகைகளை திருடி சென்றுள்ளனர். இறுதியில் அவர்கள் ஆட்டோவில் ஒட்டியுள்ள விராட் கோலி புகைப்படம் அவர்களை அடையாளம் கண்டுபிடித்து கொடுத்துவிட்டது என பெங்களூரு காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…