ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் ஆட்சி காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடி தூக்கி தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேருடன் டெல்லியில் முகாம் மிட்டார்.
அதன் பின்னர் 2 முறை நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கலந்துகொள்ளவில்லை. இதனால், சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. அவருடன் ஆதரவாளர்கள் 2 பேரின் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் பைலட் செயல்படுகிறார் எனவும் , பாஜக உடன் கூட்டணி அமைக்க போகிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால்,சச்சின் இதற்கு மறுப்பு தெரிவித்தார். சமீபத்தில் திடீரென சச்சின் பைலட், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பிறகு சமரசம் ஏற்பட்டது.
இந்த சமரசம் முடிந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் மீண்டும் பேர் ஜெய்ப்பூர் வந்தனர். இந்நிலையில், நேற்று அசோக் கெலாட் இல்லத்தில் அவரது தலைமையில் நேற்று மாலை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சச்சின் பைலட்டுக்கு அழைப்பு விடப்பட்டது.
அழைப்பை ஏற்ற சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கெலாட்டின் வீட்டிற்கு வந்தனர். அப்போது, அசோக் கெலாட் , சச்சின் பைலட் இருவரும் கைகுலுக்கி கொண்டனர். இந்நிலையில், இன்று ராஜஸ்தான் சட்டசபை நடைபெற்றது. இந்த, நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது.
இதனால் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்வதிலிருந்து தப்பியது. சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் அசோக் கெலாட், ராஜஸ்தான் முழுவதும் சந்தோஷ அலை பரவியுள்ளது. பாஜகவின் சதி திட்டம் தோல்வியடைந்தது. இந்த வெற்றி ராஜஸ்தான் மக்களின் வெற்றி என நினைக்கிறேன்.
மத்திய பிரதேசம், கர்நாடகா, கோவா, மணிப்பூர் பின்பற்றிய அதே சதி திட்டத்தை ராஜஸ்தானிலும் செயல்படுத்த பாஜக முயன்றனர். ஆனால் அவர்களின் திட்டம் தோல்வியடைந்தது என கூறினார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின்…
கொல்கத்தா : ஏர் இந்தியா விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டு வருவதால் பயணிகள் மிகவும் அதிர்ச்சியடைந்து இனிமேல் விமானத்தில்…
இஸ்ரேல் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட்…
சென்னை : வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
இஸ்ரேல் : ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு…
சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல்…