Rahul Gandhi's speech in America![Image Source : Twitter/@INCIndia]
நமக்குள் மன வேற்றுமை இருக்கலாம், ஆனால் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் பாட்னாவில் ராகுல் காந்தி பேட்டி.
பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பாஜகவுக்கு எதிராக வியூகம் வகுப்பது குறித்து அடுத்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும். எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. இருப்பினும் கொள்கையை காக்க ஒன்றுபடுவோம்.
விசாரணை அமைப்புகளை வைத்து எதிர்கட்சிகளை அச்சுறுத்தியது பாஜக. இந்தியாவின் அடி தளமே தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பொதுவான செயல்திட்டத்தை வகுத்து வருகிறோம். நமக்குள் மன வேற்றுமை இருக்கலாம், ஆனால் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்தியாவின் நிறுவனங்கள், அமைப்புகளின் குரலை பாஜக, ஆர்எஸ்எஸ் நெரித்து வருகின்றன. அவற்றை தடுக்கவும், முறியடிக்கவும் தான் நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம். மல்லிகார்ஜுன கார்கே மற்றும் நிதிஷ் குமார் கூறியபடி விரைவில் அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…
சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025)…
கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…
சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…
சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…
சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…