பிரதமர் மோடி தனது நடவடிக்கையால் கோவிட்-க்கு உதவி செய்துள்ளார். எனவே அதற்கு ‘மோவிட்’ பெயரிட்டுள்ளோம்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை கொரோனா வைரசால் மக்கள் பாதிக்கப்படுவதற்கு அவர் தான் காரணம் என்று விமர்சித்து வருகிறார்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், நாங்கள் கோவிட்-19-க்கு மோவிட் என பெயரிட்டுள்ளோம். ஏனெனில் மோடி நடவடிக்கை எடுத்திருந்தால் அது கோவிட்-ஆக மட்டுமே இருந்திருக்கும். ஆனால் பிரதமர் மோடி தனது நடவடிக்கையால் கோவிட்-க்கு உதவி செய்துள்ளார். எனவே அதற்கு ‘மோவிட்’ பெயரிட்டுள்ளோம். மேற்கு வங்கத்தில் கூட்டங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் பிரதமர் கொரோனா வைரஸ் பரவ வகுத்தார் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம். நான் கொரோனா தொற்றுநோய் குறித்து பலமுறை மத்திய அரசை எச்சரித்துள்ளோம். ஆனால் இதை மத்திய அரசு சற்றும் பொருட்படுத்தவில்லை. மேலும், 130 கோடி மக்களில், மூன்று சதவீதத்தினர் மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர் எனக் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…