கற்பழிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க 20 லட்சம் லஞ்சம்.! கைது செய்யப்பட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர்.!

Published by
மணிகண்டன்

கற்பழிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க 20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்வேதா ஜடேஜா ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு அகமாதாபாத்தில் உள்ள மகிளா காவல்நிலையத்தில் எஸ்.ஐ-ஆக பணியாற்றி வந்தவர் ஸ்வேதா ஜடேஜா. இவர் விசாரித்து வந்த கற்பழிப்பு வழக்கில் தொடர்புடைய ஒருவரை விடுவிக்க 20 லட்சம் லஞ்சம் வாங்கியுள்ளார். இதனால், போலீசார் ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் இவரை கைது செய்துள்ளனர்.

அஹமதாபாத்தில் உள்ள நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக இருப்பவர் ஷா. இவர் மீது இரண்டு கற்பழிப்பு வழக்குகள் விசாரணையில் உள்ளன. இதில் ஒரு வழக்கை எஸ்.ஐ ஸ்வேதா ஜடேஜா விசாரித்து வந்துள்ளார்.

அப்போது அந்த வழக்கில் இருந்து விடுவிக்க ஷாவின் சகோதரரிடம் 35 லட்சம் லஞ்ச பேரம் பேசியுள்ளார். இதில், 20 லட்சத்தை இடைத்தரகர் மூலமாக பெற்றுள்ளார். மேலும், 15 லட்சம் கொடுக்கும்படி தொந்தரவு செய்துள்ளார். கொடுக்காவிட்டால் கைது செய்து மாவட்டத்திற்கு வெளியில் உள்ள சிறையில் அடைத்துவிடுவேன் என கூறியுள்ளார்.

இந்த தகவல்கள் அறிந்த போலீசார் எஸ்.ஐ ஸ்வேதா ஜடேஜாவை ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் கைது செய்துள்ளனர். தற்போது அவர், நீதிமன்ற காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…

45 minutes ago

அமெரிக்கா தாக்கியதில் எங்கள் அணு உலை மையங்கள் ரொம்ப சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…

1 hour ago

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…

2 hours ago

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

3 hours ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

3 hours ago

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…

3 hours ago