காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்திக்கிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா!!

Published by
பாலா கலியமூர்த்தி

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரும் 25ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கிறார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி வரும் 25ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மம்தா டெல்லிக்குச் செல்வது இதுவே முதன்முறையாகும்.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் இன்னும் சில எதிர்க்கட்சித் தலைவர்களை முதலவர் மம்தா பானர்ஜி சந்திப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், தேர்தலுக்குப் பிறகு நான் டெல்லிக்கு வரவில்லை. இப்போது கொரோனா நிலைமை சற்று குறைவாக உள்ளது. நான் பாராளுமன்றத்தின் போது டெல்லிக்குச் செல்வேன் என்றும் நண்பர்களைச் சந்திப்பேன் எனவும் தெரிவித்தார். மேலும், எனக்கு நேரம் வழங்கப்பட்டால், பிரதமரையும், ஜனாதிபதியையும் சந்திக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில்,  கொரோனா தடுப்பு நடவடிக்கை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசை ஒன்றிணைந்து எதிர்ப்பது குறித்து இந்த சந்திப்பின் போது ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மிஷன் 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, இந்த சந்திப்பு ஏற்படுகிறது என்றும் தெரிவிக்கின்றன.

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த, எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து வலிமையுடன் போராட இந்த சந்திப்புகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனிடையே, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சந்த பவார், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசியதும் தேர்தல் திட்டம் என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், மம்தா பானர்ஜி, சோனியாவை சந்திக்கவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

3 minutes ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

32 minutes ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

1 hour ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

1 hour ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

4 hours ago

‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…

4 hours ago