நாட்டில் உள்ள மக்களுக்கு சுவாசிக்கவே ஆக்சிஜன் கிடைக்காத நிலையில் பிரதமர் மோடிக்காக கட்டும் புதிய வீட்டின் கட்டுமானப் பணிகளை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.இதன்காரணமாக,நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது கடந்த ஒரே நாளில் 3.5 லட்சத்தை எட்டியுள்ளது.இதனால்,மருத்துவமனைகளில் ஆக்சிஜன்,படுக்கை வசதி மற்றும் போதுமான தடுப்பூசி மருந்துகள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு இறக்கின்றனர்.
இந்த நிலையில்,2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் பிரதமர் மோடிக்கு புதிய இல்லம் கட்டிமுடிக்கப்படும் என்று மத்திய அரசின் பொதுப்பணித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து இன்று பேசிய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி,”கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் ஆக்சிஜன், மருத்துவமனைப் படுக்கைகள்,தடுப்பூசி மருந்துகள் போன்றவை முறையாக கிடைக்காமல் நாட்டு மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும்போது,பிரதமர் மோடிக்கு எதற்கு புதிய சொகுசு வீடு?,எனவே மத்திய அரசு ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை நிறுத்திவிட்டு,அந்தத் மொத்த தொகையையும் கொரோனா செலவினங்களுக்கு பயன்படுத்த வேண்டும்”,என்று வலியுறுத்தியுள்ளார்.
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…
லீட்ஸ் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்டை “கிரிக்கெட்…