மோடி அரசின் அராஜகம் எல்லை மீறுகிறது. பாஜகவின் தேர்தல் தோல்வி மட்டுமே இந்த தேசத்தை காப்பாற்றும்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து ராஜ்யசபாவில் உள்ள 12 எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்கும் முன்பாக,அனைத்து விவாதத்திற்கும் நாங்கள் தயார் என்றார் பிரதமர் மோடி . ஆனால் எந்தவித விவாதமும் இல்லாமல் விவசாய விரோத வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ளது. மோடி அரசு ஏன் விவாதங்களுக்குப் பயப்படுகிறது?
விவசாயிகளின் மற்ற முக்கியமான கோரிக்கைகளுக்கு மோடி அரசின் பதில் என்ன? குறைந்தபட்ச ஆதரவு விலை,விவசாயத்திற்கு எதிரான மின்சார மசோதா,போராட்ட வழக்குகளை திருப்பப்பெறுதல்,விவசாயிகளை படுகொலைக்குப் பின் உள்ள ஒன்றிய இணை அமைச்சர் பதவி விலகல் இவை பற்றி ஏன் மோடி அரசு பேச மறுக்கிறது?
இந்த கோரிக்கைக்காக நாடாளுமன்ற மாநிலங்களவையில் போராடிய காங் உள்ளிட்ட 12 எதிர்கட்சி எம் பி கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விவசாயிகளின் கோரிக்கைகளை முன்வைத்து போராடுவது குற்றமா? மோடி அரசின் அராஜகம் எல்லை மீறுகிறது. பாஜகவின் தேர்தல் தோல்வி மட்டுமே இந்த தேசத்தை காப்பாற்றும்.’ என பதிவிட்டுள்ளார்.
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…