பிரதமர் மோடி நடத்தை விதிகளை மீறியுள்ளதால் ஏன்..? அவரது விசாவை ரத்து செய்யக் கூடாது என மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
காரக்பூரில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவியும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், கடந்த மக்களவை தேர்தலின் போது வங்கதேச நடிகர் திரிணாமுல் காங்கிரஸ் பேரணியில் கலந்து கொண்டார். அப்போது பாஜக இதுகுறித்து வங்கதேச அரசுடன் பேசி அந்த நடிகரின் விசாவை ரத்து செய்தது.
தற்போது மேற்கு வங்கத்தில் சட்ட பேரவைத்தேர்தல் நடைபெறும் நிலையில், பிரதமர் மோடி வங்கதேசம் சென்றுள்ளார். நடத்தை விதிகளை பிரதமர் மோடி மீறியுள்ளதால் ஏன்..? அவரது விசாவை ரத்து செய்யக் கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார். விதிமீறல் குறித்து பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்திடம் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுக்க உள்ளோம் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
வங்காள தேசத்தின் 50-வது சுதந்திர தினம் மற்றும் வங்காள தேச தேசத் தந்தை ஷேக் முஜிபூர் ரகுமானின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்ததை தொடர்ந்து நேற்று பிரதமர் மோடி வங்காள தேசம் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…