ஹரியானாவில் கணவரால் கடந்த ஒரு வருடமாக கழிவறைக்குள்ளேயே பூட்டிவைக்கப்பட்ட பெண் மீட்பு.
ஹரியானா மாநிலத்திலுள்ள பானிப்பட் எனும் கிராமத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவியை கடந்த 1 ஆண்டுகளாக கழிவறையிலேயே பூட்டி வைத்துள்ளார். இந்நிலையில், பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமண தடை அதிகாரிகள் ரஜினி குப்தா அவர்களுக்கு இது குறித்து கிடைத்த தகவலின் பேரில் அவரது தலைமையிலான குழுவினர் அவ்விடத்திற்கு விரைந்து சென்று கழிவறையில் பூட்டி வைக்கப்பட்டு இருந்த பெண்ணை மீட்டு உள்ளனர். நடப்பதற்கு கூட தெம்பில்லாமல் அந்த பெண் இருந்துள்ளார்கள்.
இது குறித்து விளக்கமளித்த ரஜினி குப்தா, ஒரு வருடத்திற்கு மேலாக பெண் பூட்டி வைத்து இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து நாங்கள் சென்று பார்த்த பொழுது உண்மை என்பதை கண்டறிந்து அப்பெண்ணை மீட்டோம். பல நாள் சாப்பிடாமல் இருப்பதால் மிக மோசமான நிலையில் உள்ளார். மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறுகின்றனர், ஆனால் அது உண்மை அல்ல, எங்களிடம் அவள் நல்ல முறையில் தான் பேசுகிறார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் பெண்ணின் கணவரை கைது செய்துள்ளனர்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…