செய்திகள்

குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் வெளிநாடுகளுக்கு கடிதங்களையும் பார்சல்களை அஞ்சலகங்கள் மூலம் அனுப்ப புது வசதி….!

சென்னை தியாகராய நகர் தலைமை அஞ்சல் நிலையத்தில் வெளிநாட்டு தபால்களுக்கென நேற்று தனி கவுண்டர் துவக்கப்பட்டது. இவ்வசதியை துவக்கி வைத்துப் பேசிய தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் அதிகாரி சம்பத் இவ்வசதியானது இன்னும் இதர பெரிய அஞ்சலகங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்தார். தனியார் கூரியர் நிறுவங்களை விடவும் மிகவும் குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் வெளிநாடுகளுக்கு கடிதங்களையும் பார்சல்களை அஞ்சலகங்கள் மூலம் அனுப்பலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

2 Min Read
Default Image

சபரிமலையில் பெண்களை அனுமதித்தால் பாலியல் சுற்றுலா தளமாகிவிடும்-தேவஸ்தானத்தின் தலைவர்

கேரளாவில் உள்ள சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்ககோரி கேரளா இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கானது நேற்று விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து இந்த வழக்கானது சட்ட வரைவு அமர்வு மன்றதிற்கு மாற்றுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து கோவில்களில் பெண்களை அனுமதித்தால் அது பாலியல் சுற்றுலா தளமாகிவிடும் என்று சபரிமலை கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் கூறியுள்ளார். அவரது இந்த கருத்திற்கு பெண்ணிய ஆர்வலர்கள் தொடர்ந்து கண்டன குரல் எழுப்பிவருகின்றனர்.

india 2 Min Read
Default Image

முகேஷ் அம்பானியின் ஜியோ செல்ஃபோன் சேவை நிறுவனம் நஷ்டத்தில் ஓடுகிறதா…?

முகேஷ் அம்பானியின் ஜியோ செல்ஃபோன் சேவை நிறுவனமானது கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 271 கோடி ரூபாய் நிகர நஷ்டத்தை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 21 கோடி ரூபாய் மட்டுமே நஷ்டம் ஏற்பட்டிருந்த நிலையில் இந்தாண்டு அது சுமார் 13 மடங்கு அதிகரித்துள்ளது. எனினும் அவரது மற்றொரு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மட்டும் கடந்த காலாண்டில் 8 ஆயிரத்து 109 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. ஆனால் அவருடைய சொத்து மதிப்பு […]

india 2 Min Read
Default Image

தமிழகத்தில் டெங்குவை கட்டுப்படுத்த வருகிறது நடமாடும் மருத்துவமனைகள்….!

தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சலால் சுமார்100க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.இதனால் டெங்குவை கட்டுப்படுத்திட தமிழக அரசு சார்பில் நடமாடும் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை வளசரவாக்கத்தில் இந்த நடமாடும் மருத்துவமனைகளை ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் தொடங்கி வைத்தார். இந்த பகுதியில் உள்ள 15 வார்டுகளுக்கும் தனித்தனியாக நடமாடும் மருத்துவமனைகள் மற்றும் கொசு மருந்து அடிக்க பயன்படும் இயந்திரங்கள் ஆகியவற்றை அமைச்சர் வழங்கினார். மேலும் டெங்கு அறிகுறிகள் உள்ள பகுதிகளில் சிறப்பு மருத்துவமனை முகாம்கள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2 Min Read
Default Image

அரசு பள்ளியில் ஆசிரியை தாக்கியதில் 8ஆம் வகுப்பு மாணவி மயக்கம்….!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நற்சாந்துபட்டியில் இயங்கி வருகிற அரசு உதவிபெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவி சுபலேகா, ஆசிரியை தாக்கியதில்   மயங்கி விழுந்தார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நற்சாந்துபட்டி அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவி சுபலேகா. சுபலேகாவின் தம்பியும் அதேபள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே பள்ளியில் படிக்கும் 3 மாணவர்கள் சுபலேகாவின் தம்பியை அடித்துள்ளனர். இதனால் சுபலேகா, பள்ளி ஆசிரியையிடம் இது குறித்து புகார் தெரிவித்துள்ளார். […]

education 3 Min Read
Default Image

கவுரி லங்கேஷ் கொலையாளிகளின் மாதிரி வரைபடங்கள் வெளியீடு….!

பெங்களூருவை சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும் முற்போக்கு எழுத்தாளருமான கவுரி லங்கேஷ் (55), கடந்த மாதம் பெங்களூருவில் உள்ள தனது வீட்டின் வாசலில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பலரும் அவருக்கு ஆதரவாக பேசவும் எழுதவும் தொடங்கினர் . இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதுவரை குற்றவாளிகள் யாரென்று கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் குற்றவாளிகளின் மாதிரி புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய சிறப்புப் புலனாய்வுக் குழு […]

india 3 Min Read
Default Image

மலை உச்சியில் இருந்து தவறி விழுந்த வாலிபர்!!

சஞ்சிவராயர் மலையில் கிரிவலதிற்காக சென்ற வாலிபர் கோவிலை இரண்டு முறை சுற்றி முன்றம் முறை சுற்றி வரும் போட்டு பாறை வழுக்கி 3500 பள்ளத்தில் விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை தேடிய போதும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. பள்ளத்தில் விழுந்தவரை தேடும் பணி நடந்து வருகின்றது. பள்ளத்தில் விழுந்தவரை பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. போலீசார் அவரை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
Default Image

தமிழகத்தில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிணி முறையில் கல்வி வழங்க ஏற்பாடு….!

ஸ்ரீரங்கம்:இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழக மாணவர்களுக்கான விபத்து காப்பீடு திட்டம் கொண்டு வர இருக்கிறோம்  என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிணி முறையில் கல்வி வழங்க 486 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.

education 1 Min Read
Default Image

உ.பியில் யோகியின் ஆட்சியில் மேலும் 75 குழந்தைகள் இறப்பு …!

கடந்த 5 நாட்களில் பிஜேபியின் யோகி ஆதித்தியநாத்  முதல்வராக ஆளும் உத்திர பிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையில் போதிய பராமரிப்பின்றி மேலும் 75 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் சுகாதார பராமரிப்பில் உத்திர பிரதேச மாநிலமே இந்தியாவுக்கு முன்னோடியாக திகழ்கின்றது என்று நரேந்திர மோடி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் பெருமையாக பேசி வருகிறார்கள். மேலும் ரூ.196 கோடியில் ராமர் சிலை இதிகாச பாத்திரமான, ராமருக்கு, ரூ. 195 கோடியே 89லட்சம் செலவில் சுமார் 328 அடி உயரத்திற்கு சிலை அமைக்கஉத்தரப்பிரதேச பாஜக […]

india 2 Min Read
Default Image

வைகை ஆற்றில் 2 ஆண்டுக்கு பிறகு நீர் பெருக்கு…

வைகை ஆறு உற்பத்தியாகும் வருசநாடு பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மழை பெய்யவில்லை. இதனால், மூல வைகை ஆறு வறண்டு காணப்பட்டது. இந்த நிலையில், வருசநாடு, வெள்ளிமலை, உடங்கல் ஆகிய பகுதிகளில், கடந்த சில நாட்களாக  தொடர்ந்து மழைபெய்து வருகிறது.  இதனால், மூல வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது ஆகையால் நீர் பெருக்கு விரைவில் வைகை அணையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வைகை அணை தற்போது 52 அடியை தாண்டியுள்ள நிலையில், விரைவில் முழுக் […]

2 Min Read
Default Image

என்னை விட சிறந்த பிரதமராக முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இருந்திருப்பார்…முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

நேற்று டெல்லியில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது .இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ”தான் அரசியலுக்கு வந்தது ஒரு மிகப் பெரிய விபத்து எனவும் பிரதமர் பதவிக்கு தன்னை விட பிரணாப் முகர்ஜி தான் பொருத்தமானவராய் இருந்தார் என்றும் அவர் தெரிவித்தார். ஆனாலும் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படாததை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், தன்னுடன் சுமூகமாக பிரணாப் முகர்ஜி பழகினார்” என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார். இந்த புத்தக வெளியீட்டு […]

india 3 Min Read
Default Image

தமிழகத்திலும் நிர்பயாக்கள்…காதலன் கண்முன் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்…!

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அருகே நெடுமரம கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயது பெண். இவர் கூவத்தூரில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்த பெண்,தினமும் தனது வேலையை முடித்துவிட்டு, நெடுமரத்தில் உள்ள தனது காதலனைச் சந்தித்து வருவாராம். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று, இந்த பெண் வேலையை முடித்துவிட்டு,தனது காதலனோடு வீட்டிற்க்கு சென்றிருக்கிறார். அப்போது, இவர்களை நான்கு பேர் கொண்ட கும்பல் பின்தொடர்ந்துள்ளனர். இந்த பெண் மற்றும் அவளின் காதலன் உடன் நெடுமரம் கிராமத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, […]

4 Min Read
Default Image

யார்தான் அரசியலுக்கு வரவேண்டும் …? யார்தான் அடுத்த முதல்வர் ஆகவேண்டும்….?

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரக்கூடிய உரிமை ஜனநாயக நாட்டில் உண்டு.அதனை நமது அரசியலமைப்பு சட்டமும் நமக்கு வழங்கியுள்ளது .ஆனால், தமிழகத்தில் ஏற்பட்டுருக்கிற அரசியல்  வெற்றிடத்தை கணக்குப்போட்டு ”காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வோம் என்று கூறிக்கொண்டு வருவது தான் சந்தர்ப்பவாதம் என்பார்கள். குறிப்பிட்ட காலம் சாதாரணத் தொண்டனாக அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு சேவை செய்து, அதன் பின்னரே தேர்தலில் குதித்து ஆட்சியை பிடிப்பதுதான் நியாயம்.நேற்று கட்சி ஆரம்பித்து, இன்று ஆட்சியை பிடித்துவிடலாம் என்று எண்ணுவது சரியல்ல.மக்களிடையே பிரபலம் என்பதால் மட்டுமே ஒருவர் முதல்வர் […]

#Politics 2 Min Read
Default Image

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கோரி வழக்கு இன்று விசாரணை…!

புதுடில்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது குறித்து சுப்ரீம் கோர்ட் இன்று (13ம் தேதி) முக்கிய முடிவு எடுக்கிறது டெல்லி உச்சநீதிமன்றம்.  கேரளாவிலுள்ள சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில், பத்து வயதுக்கு உட்பட்ட சிறுமியரும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே கோயிலுக்குள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா இளம் வழக்கறிஞர்கள் சங்கம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ‘சபரிமலைக்கு செல்ல, பெண்களுக்கு அனுமதி […]

india 3 Min Read
Default Image
Default Image
Default Image
Default Image

தமிழில் முனைவர்(P.hd) பட்டம் பெற்ற அரசியல் தலைவர்…!

அறியப்படாத நந்தன் என்னும் தலைப்பில் தனது ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்து 10.10.2017 அன்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்கான பொது வாய்மொழித் தேர்வை எதிர்கொண்டார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் .பின்பு தனது விடுதலை  சிறுத்தைகள் கட்சி தலைவர் தோல்.திருமாவளவன் முன்னிலையில் மாண்புமிகு தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தரிடமிருந்து முனைவர் பட்டத்துக்கான சான்றிதழைப் பெற்றார்.  அந்த  பட்டமளிப்பு விழாவில் ஆய்வு நெறியாளர் சாம்பசிவம் உதயசூரியன்,தேர்வாளர் அ. ராமசாமி, பதிவாளர், துறைத் தலைவர் குறிஞ்சி வேந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

#Politics 2 Min Read
Default Image

தேனியில் சாலையை சரிசெய்யக்கோரி நாற்று நடும் போராடட்டம்

தேனி  மாவட்டம் கம்பம் நகர் தெற்கு பகுதியில் நேற்று  பெய்த  சிறு  மழைக்கே  தாக்கு பிடிக்க முடியாமல்  போனது அப்பகுதியில் போடப்பட்டுள்ள  சாலை . ஆகவே இன்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் நெல்லு குத்தி புளியமரம் அருகில் உள்ள சாலையை சரிசெய்ய வலியுறுத்தி அதிகாலையில் நாற்று நடும் போராடட்டம் நடைபெற்றது .

1 Min Read
Default Image

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைத்துறை கூட்டம்…!

நேற்று கரூர் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட சிறுபான்மைத்துறை கூட்டம்  நடைபெற்றது.இக்கூட்டத்திற்குத் மாநில சிறுபான்மைத்துறைத் தலைவர் அஸ்லாம் பாஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது . மேலும்  இக்கூட்டத்தில் கரூர் மாவட்ட சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் அன்புச் சகோதரர் முகமது சக்காரியா,கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சின்னசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் .

#Politics 1 Min Read
Default Image