புதுச்சேரி

மாநில அந்தஸ்து கோரும் புதுச்சேரி.! ஒப்புதல் அளித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை.!

Published by
மணிகண்டன்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்த்து கோரும் கோரிக்கை அவ்வப்போது புதுச்சேரி சட்டசபையில் எழும். அந்த கோரிக்கைகள் அப்படியே நிலுவையில் இருந்துவிடும். புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மத்திய உள்துறையின் அனுமதி பெற்ற பிறகே நிறைவேற்றப்படும்.

இதுபோல மாநிலம் அல்லாத யூனியன் பிரதேசங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இதனை நீக்கி மாநில அரசாக செயல்பட புதுச்சேரி அரசு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன. கடந்த மார்ச் மாதமும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்த்து கோரும் தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டும். நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளிக்கவில்லை என கூறி அவர் மீது கண்டனங்கள் வலுத்தன.

இதனை முன்னிட்டு, இன்று தனது விளக்கத்தை தமிழிசை சௌந்தரராஜன் அளித்துள்ளார். அதில், மார்ச் மாதம் புதுச்சேரி மாநில அந்தஸ்த்து குறித்த மசோதா நிறைவேற்றப்பட்டாலும், புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு கடந்த ஜூன் 22ஆம் தேதி தான் கிடைக்கப்பெற்றது. அதனை 23ஆம் தேதியே கையெழுத்திட்டு மத்திய உள்துறைக்கு அனுப்பி வைத்து விட்டேன் என தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

செஸ் உலகக்கோப்பை தொடரில் வெண்கலம் வென்று அசத்திய தமிழ்நாட்டு சிறுமி!

படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…

6 minutes ago

ராமராக ரன்பீர்.., ராவணனாக யாஷ்.!! மிரள வைக்கும் ‘ராமாயணம்’ ஃபர்ஸ்ட் லுக் வீடியோ.!

சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…

10 minutes ago

ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்.!

டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…

40 minutes ago

அஜித் மரணம்: மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை.!

சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…

1 hour ago

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

2 hours ago

7 நாட்கள் ஓய்வு கிடைத்த பிறகும் பும்ராவுக்கு அணியில் இடம் கொடுக்கவில்லை? ரவி சாஸ்திரி ஆதங்கம்!

எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…

2 hours ago