Pudhucherry Governor Tamilisai soundarajan [Image source : Express Photo]
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்த்து கோரும் கோரிக்கை அவ்வப்போது புதுச்சேரி சட்டசபையில் எழும். அந்த கோரிக்கைகள் அப்படியே நிலுவையில் இருந்துவிடும். புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மத்திய உள்துறையின் அனுமதி பெற்ற பிறகே நிறைவேற்றப்படும்.
இதுபோல மாநிலம் அல்லாத யூனியன் பிரதேசங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இதனை நீக்கி மாநில அரசாக செயல்பட புதுச்சேரி அரசு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன. கடந்த மார்ச் மாதமும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்த்து கோரும் தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டும். நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளிக்கவில்லை என கூறி அவர் மீது கண்டனங்கள் வலுத்தன.
இதனை முன்னிட்டு, இன்று தனது விளக்கத்தை தமிழிசை சௌந்தரராஜன் அளித்துள்ளார். அதில், மார்ச் மாதம் புதுச்சேரி மாநில அந்தஸ்த்து குறித்த மசோதா நிறைவேற்றப்பட்டாலும், புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு கடந்த ஜூன் 22ஆம் தேதி தான் கிடைக்கப்பெற்றது. அதனை 23ஆம் தேதியே கையெழுத்திட்டு மத்திய உள்துறைக்கு அனுப்பி வைத்து விட்டேன் என தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…