Tamilnadu Harbour Strom cage stage 2 [File Image]
தென் கிழக்கு வங்கக்கடலில் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, நிலைகொண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, பின்னர் அது புயலாக இன்று காலை வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மிதிலி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயலானது தற்போது 190 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இந்த மிதிலி புயலானது வங்கதேசம் ஒட்டிய கரை பகுதியில் கரையை கடக்க உள்ளது. இதனால் தமிழகத்துக்கு நேரடி பாதிப்பு இல்லை என்றாலும், மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே புயல் உருவாக வாய்ப்பு இருப்பதை குறிப்பிடும் வகையில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது. தற்போது புயல் உருவாகிவிட்ட காரணத்தால், 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவானது “மிதிலி” புயல்! நாளை கரையை கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு!
2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு என்பது புயல் உருவாகியுள்ளதால், காற்றின் வேகம் சற்று அதிகமாக இருக்கும் என்பதை குறிப்பிடுகிறது. புயலின் தாக்கத்தை கொண்டு மொத்தம் 11ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வரை ஏற்றப்படும்.
மிதிலி புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் எனவும், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…