Tamilnadu Harbour Strom cage stage 2 [File Image]
தென் கிழக்கு வங்கக்கடலில் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, நிலைகொண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, பின்னர் அது புயலாக இன்று காலை வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மிதிலி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயலானது தற்போது 190 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இந்த மிதிலி புயலானது வங்கதேசம் ஒட்டிய கரை பகுதியில் கரையை கடக்க உள்ளது. இதனால் தமிழகத்துக்கு நேரடி பாதிப்பு இல்லை என்றாலும், மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே புயல் உருவாக வாய்ப்பு இருப்பதை குறிப்பிடும் வகையில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது. தற்போது புயல் உருவாகிவிட்ட காரணத்தால், 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவானது “மிதிலி” புயல்! நாளை கரையை கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு!
2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு என்பது புயல் உருவாகியுள்ளதால், காற்றின் வேகம் சற்று அதிகமாக இருக்கும் என்பதை குறிப்பிடுகிறது. புயலின் தாக்கத்தை கொண்டு மொத்தம் 11ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வரை ஏற்றப்படும்.
மிதிலி புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் எனவும், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…