பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் வரும் 24 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை ஆன்லைனில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர, மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதுமட்டுமின்றி, அரியர்ஸ் எழுதுவதற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள், வரும் 24 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை ஆன்லைனில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது. இந்த தேர்வுகள், 1 மணிநேரம் நடைபெறும் எனவும், மாதிரி தேர்வுகள் 19 மற்றும் 21 ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளது.
இந்த தேர்வில் மொத்தம் 40 கேள்விகள் கேட்கப்படும் எனவும், அதில் 30 கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்தால் போதும் என தெரிவித்தனர். மேலும், தேர்வெழுதும் மாணவர்களுக்கு பிரத்யேக லாகின் ஐடி மற்றும் பாஸ்வர்டு, மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…