தமிழகம்:மத்திய உள்துறை இணைச்செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான மத்தியக் குழுவினர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து தமிழகத்தில் மழையினால் ஏற்பட்ட சேதங்களை இன்று முதல் ஆய்வு செய்யவுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில்,தமிழகத்தில் அவ்வப்போது மிக கனமழை பெய்து வருகிறது.இதன் காரணமா,சென்னை, காஞ்சிபுரம், கடலூர் திருவள்ளூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.இதனையடுத்து,பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம்,ரூ.2,629 கோடி ரூபாய் நிவாரண நிதி கேட்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து,மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணைச்செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழுவினர் சென்னைக்கு நேற்று வருகை புரிந்தனர்.இக்குழுவில் விவசாயம்,நிதி,நீர்வளம், மின்சாரம், போக்குவரத்து,ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
இதனையடுத்து,மத்திய குழுவினர் தமிழக தலைமை செயலாளர் இறையன்புவை நேற்று மாலை சந்தித்து மழை பாதிப்பினை ஆய்வு செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.அதன்பிறகு,ரிப்பன் மாளிகைக்கு மத்திய குழுவினர் சென்று,அங்கு மழை பாதிப்புகள் தொடர்பாக வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை பார்வையிட்டனர்.
இந்நிலையில்,மத்திய உள்துறை இணைச்செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான மத்தியக் குழுவினர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து தமிழகத்தில் மழையினால் ஏற்பட்ட சேதங்களை இன்று ஆய்வு செய்யவுள்ளனர்.அதன்படி,காலை 9 மணி முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு குழுவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் மற்றொரு குழுவும் ஆய்வு செய்ய உள்ளது.
இதனைத் தொடர்ந்து,நாளை (23 ஆம் தேதி) கடலூர்,மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மத்தியக் குழு ஆய்வு செய்யவுள்ளது.மேலும், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஒரு குழுவும்,வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் மற்றொரு குழுவும் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதனையடுத்து,வருகின்ற 24 ஆம் தேதி இக்குழுவினர் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு டெல்லிக்கு புறப்பட்டு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசு, தமிழ்நாட்டில் தனது ஆட்சியின் ஐந்தாவது ஆண்டில்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள்…
சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாகப் பணியாற்றிய டாக்டர் சலாஹுத்தீன் முகமது அயூப் (84) மே 24, 2025 அன்று…
அஹமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடி வந்த சென்னை அணி புள்ளி விவரப்பட்டியலில் கடைசி இடத்துடன் வெளியேறியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் அமலாக்கத்துறை தொடர்ச்சியாக பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், புதுக்கோட்டையில் மே 24-அன்று…
அமெரிக்கா : பிஃபா (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபன்டினோ, கிறிஸ்டியானோ ரொனால்டோ அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை…