தமிழகத்தில் பருவமழை பாதிப்பு:மத்தியக் குழு இன்று முதல் ஆய்வு!

Published by
Edison

தமிழகம்:மத்திய உள்துறை இணைச்செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான மத்தியக் குழுவினர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து தமிழகத்தில் மழையினால் ஏற்பட்ட சேதங்களை இன்று முதல் ஆய்வு செய்யவுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில்,தமிழகத்தில் அவ்வப்போது மிக கனமழை பெய்து வருகிறது.இதன் காரணமா,சென்னை, காஞ்சிபுரம், கடலூர் திருவள்ளூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.இதனையடுத்து,பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம்,ரூ.2,629 கோடி ரூபாய் நிவாரண நிதி கேட்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணைச்செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழுவினர் சென்னைக்கு நேற்று வருகை புரிந்தனர்.இக்குழுவில் விவசாயம்,நிதி,நீர்வளம், மின்சாரம், போக்குவரத்து,ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

இதனையடுத்து,மத்திய குழுவினர் தமிழக தலைமை செயலாளர் இறையன்புவை நேற்று மாலை சந்தித்து மழை பாதிப்பினை ஆய்வு செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.அதன்பிறகு,ரிப்பன் மாளிகைக்கு மத்திய குழுவினர் சென்று,அங்கு மழை பாதிப்புகள் தொடர்பாக வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை பார்வையிட்டனர்.

இந்நிலையில்,மத்திய உள்துறை இணைச்செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான மத்தியக் குழுவினர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து தமிழகத்தில் மழையினால் ஏற்பட்ட சேதங்களை இன்று ஆய்வு செய்யவுள்ளனர்.அதன்படி,காலை 9 மணி முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு குழுவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் மற்றொரு குழுவும் ஆய்வு செய்ய உள்ளது.

இதனைத் தொடர்ந்து,நாளை (23 ஆம் தேதி) கடலூர்,மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மத்தியக் குழு ஆய்வு செய்யவுள்ளது.மேலும், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஒரு குழுவும்,வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் மற்றொரு குழுவும் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதனையடுத்து,வருகின்ற 24 ஆம் தேதி இக்குழுவினர் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு டெல்லிக்கு புறப்பட்டு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recent Posts

தூத்துக்குடி விமான நிலையம் இன்று திறப்பு.., சிறப்பம்சங்கள் என்னென்ன.?

தூத்துக்குடி விமான நிலையம் இன்று திறப்பு.., சிறப்பம்சங்கள் என்னென்ன.?

தூத்துக்குடி : தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று (ஜூலை 26, 2025) இரவு 8 மணிக்கு பிரதமர்…

18 minutes ago

“அன்புமணி நடைப்பயணத்துக்கு தடையில்லை” – பாமக வழக்கறிஞர் பாலு விளக்கம்.!

சென்னை : அன்புமணியின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும் என்று டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, அன்புமணி…

43 minutes ago

சிறுமி வன்கொடுமை – வடமாநில இளைஞரிடம் விடிய விடிய விசாரணை.!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி பள்ளி முடிந்து…

1 hour ago

பிரதமர் மோடியைச் சந்திக்க இபிஎஸ் திட்டம்.! அனுமதி மறுக்கப்பட்டதால் ஓ.பன்னீர்செல்வம் ஏமாற்றம்.!

தூத்துக்குடி : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் அங்கிருந்து…

2 hours ago

நடைபயணத்திற்கு தடை – நீதிமன்றத்தை நாடும் அன்புமணி.!

சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை…

2 hours ago

2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை.!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 26, 2025) தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வருகிறார். தற்போது…

3 hours ago