புகார் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு விரைந்தார் மு.க.ஸ்டாலின்..!

Published by
kavitha
  • வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியீடு தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் மு.க ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திற்கு  விரைந்தார்.
  • வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியீடு தொடர்பாக மீண்டும் புகார் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகை

 

தமிழகத்தில் மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆனது 2 கட்டங்களாக கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது.இந்நிலையில் தற்போது நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கும் எண்ணும் பணியானது காலையிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்த வாக்கு எண்ணிக்கையில் மொத்தம் உள்ள 5090 ஒன்றிய உறுப்பினர்களில் அ.தி.மு.க  மற்றும் அதன் கூட்டணிகள் 926 இடங்களையும்,எதிர்கட்சியான  தி.மு.க மற்றும் அதன்  கூட்டணிகள் 1078 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளது.இரவிலும் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி கவுன்சிலர் பதவிக்கான மொத்தம் 515 இடங்களுக்கு போட்டிட்ட  அதிமுக 177 இடங்களிலும்,திமுக 178 இடங்களிலும் , ஒன்றிய கவுன்சிலர் பதிவிக்கான மொத்தம் 5067 இடங்களுக்கு போட்டியிட்ட அதிமுக 1209 இடங்களிலும்,திமுக 1196 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு காலை முதல் வாக்கு எண்ணும் பணி தீவிரமாக இரவு வேளையிலும் நடந்து கொண்டு வருகிறது.திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வெற்றி அறிவிப்பில் தாமதம் எனக்கூறி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இது குறித்து ஸ்டாலின் கூறுகையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை நோக்கி முந்திச் சென்று கொண்டிருப்பதாகவும், திமுகவின் இந்த வெற்றியை தடுத்து நிறுத்துவதற்காகவே ஆளும் அதிமுக , காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் சதி செய்வதாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்த போதிலும் நடவடிக்கை எடுக்கப்படாததால் தான் நீதிமன்றத்தை நாட உள்ளோம் என்று கூறியிருந்தார்.இந்நிலையில் திமுக சார்பில் இன்று பிற்பகலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவானது  செய்யப்பட்டது. அதில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடப்பதாகவும், எடப்பாடி,  திண்டுக்கல், சங்ககிரி, கரூர்,உள்ளிட்ட பல பகுதிகளில் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் செய்கின்றனர் என்று மனுவில் குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்டது.மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக இன்று மாலையே விசாரிக்க வேண்டும் என்று திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்ற அவசர வழக்காக நீதிபதிகள்  விசாரிக்க மறுத்துவிட்டனர்.ஆனால் இரவில் ஒரு உத்தரவினை தேர்தல் ஆணையத்திற்கு உறுதிபட தெரிவித்துள்ளனர். அதில் வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்கிறது என்ற உறுதி மொழியையும்,சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருப்பதை ஆணையம் உறுதி செய்ய வேண்டும் மேலும் ஆணையம் நாளை மாலை 4  மணிக்குள் எழுத்துபூர்வமாக  அறிக்கை அளிக்க வேண்டும் என்று  நீதிபதி சத்தியநாராயணன் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த நிலையில் தான் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியீடு தொடர்பாக மீண்டும் புகார் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விரைந்துள்ளார்.ஆணையத்திற்கு  வருகை  தந்துள்ள மு.க ஸ்டாலினுடன் கட்சி நிர்வாகிகளும் குவிந்து  வருகின்றனர்.திமுக வெற்றி பெற்ற பல இடங்களில் சான்றிதழ்கள் தர மறுக்கின்றனர் என்று தேர்தல் ஆணையத்திடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகார் அளித்துள்ளார்.

Recent Posts

போதைப்பொருள் விவகாரம்: ‘Code Word-ல்’ பேசியது அம்பலம்.., நடிகர் கிருஷ்ணா கைது.!

போதைப்பொருள் விவகாரம்: ‘Code Word-ல்’ பேசியது அம்பலம்.., நடிகர் கிருஷ்ணா கைது.!

சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…

29 minutes ago

”ஓரவஞ்சனை செய்கிற மத்திய அரசால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை” – மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…

35 minutes ago

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

1 hour ago

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…

2 hours ago

“எனது ”நண்பர் கலைஞர் பாணி.. இறுதி மூச்சு வரை நான்தான் பாமக தலைவர்” – ராமதாஸ் உறுதி.!

விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…

2 hours ago

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

4 hours ago