போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 559 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • சென்னை போக்குவரத்து காவல்துறை விதி மீறலில் ஈடுபட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
  • இந்த ஆண்டில் மட்டும் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 559 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை போக்குவரத்து காவல்துறை போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டில் 7749 விபத்துகள் நடைபெற்றதாகவும், அதில் 1,260 பேர் விபத்தில் பலியானதாகவும் தெரிவித்தனர். நடப்பாண்டில் 6832 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 1,224 பேர் விபத்தில் பலியானதாகவும் குறிப்பிட்டனர். பின்னர்  சென்னையில் போக்குவரத்து விதிமீறல்கள் ஈடுபட்டவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதற்காக 1 லட்சத்து 77 ஆயிரம் பேர் பரிந்துரை செய்யப்பட்டதாகவும், இதுவரை சுமார் 1 லட்சத்து 30 ஆயிரத்து 159 பேர் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை கடந்த இரு ஆண்டுகளில் இருமடங்கு உயர்ந்துள்ளதாகவும், இந்த ஆண்டு 51,900 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இ-சலான் முறையில் இந்த ஆண்டில் மட்டும் 29 கோடியே 80 லட்சம் ரூபாயினை சென்னை போக்குவரத்து போலீசார் வசூல் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

7 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

7 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

8 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

9 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

9 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

10 hours ago