கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் 10% விலை தள்ளுபடி வழங்கப்படும் என்று புதுச்சேரி விடுதிகள் மற்றும் உணவகங்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த மார்ச் முதல் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியது. குறிப்பாக தமிழகம், மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், குஜராத், உள்ளிட்ட 8 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது. இதனைதொடர்ந்து அம்மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில், கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமடைந்து வருகிறது.
அந்தவகையில் புதுச்சேரியிலும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது. இதன்காரணமாக அம்மாநிலத்தில் திரையரங்குகள் 50% இருக்கைகள் மட்டுமே அனுமதி, உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் 10% விலை தள்ளுபடி வழங்கப்படும் என்று புதுச்சேரி விடுதிகள் மற்றும் உணவகங்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.
மக்கள் கொரோனா தடுப்பூசி போடா அச்சம் காட்டிவரும் நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டதை ஊக்குவிக்கும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த சலுகையை அறிவித்துள்ளதாக புதுச்சேரி விடுதிகள் மற்றும் உணவகங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…