டிரை ஐஸ் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை.! உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை.!

Published by
கெளதம்

Food Safety Department : திரவ நைட்ரஜன் உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

டிரை ஐஸை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு கண் பார்வை, பேச்சு பறிபோகும் ஆபத்து இருப்பதாகவும், உயிரிழப்புகள் நேரலாம் எனவும் தமிழக உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் திரவ நைட்ரஜன் கலந்த உணவு பொருட்கள் விற்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதாவது, ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் அதன் புகையை தாங்க முடியாமல் கூச்சலிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் சென்னையில் ஸ்மோக் பிஸ்கட் தயார் செய்யும் இடங்களில் ஆய்வு செய்தார்.

அதன் பின்னர், உணவு பாதுகாப்புத்துறை சார்பாக அதிகாரிகளுக்கு ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது. அதன்படி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திரவ நைட்ரஜன் கலந்த உணவுப் பொருட்கள் விற்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகள் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது என்றும், திரவ நைட்ரஜன் கலந்த உணவு பொருட்களை விற்க கூடாது என்றும், அதனை மீறினால் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 days ago