டிரை ஐஸ் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை.! உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை.!

Published by
கெளதம்

Food Safety Department : திரவ நைட்ரஜன் உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

டிரை ஐஸை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு கண் பார்வை, பேச்சு பறிபோகும் ஆபத்து இருப்பதாகவும், உயிரிழப்புகள் நேரலாம் எனவும் தமிழக உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் திரவ நைட்ரஜன் கலந்த உணவு பொருட்கள் விற்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதாவது, ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் அதன் புகையை தாங்க முடியாமல் கூச்சலிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் சென்னையில் ஸ்மோக் பிஸ்கட் தயார் செய்யும் இடங்களில் ஆய்வு செய்தார்.

அதன் பின்னர், உணவு பாதுகாப்புத்துறை சார்பாக அதிகாரிகளுக்கு ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது. அதன்படி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திரவ நைட்ரஜன் கலந்த உணவுப் பொருட்கள் விற்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகள் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது என்றும், திரவ நைட்ரஜன் கலந்த உணவு பொருட்களை விற்க கூடாது என்றும், அதனை மீறினால் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

18 minutes ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

1 hour ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

1 hour ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

2 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

2 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

3 hours ago