[file iamge]
நியாயவிலை கடை பணியாளர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தேடி சென்று டோக்கன் வழங்கி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது. அதன்படி, நியாயவிலை கடை பணியாளர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தேடி சென்று டோக்கன் வழங்கி வருகின்றனர். சென்னையில் பல்வேறு இடங்களில் நியாயவிலை கடை பணியாளர்கள் டோக்கன், விண்ணப்பம் வழங்குகின்றனர். நியாயவிலை கடைகளில் டோக்கன் குறித்த தகவல்களை அறிவிப்பு பலகை மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
குடும்ப தலைவைகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செப்டம்பர் 15-ஆம் தேதி முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ள நிலையில், அதற்கான டோக்கன், விண்ணப்பம் வழங்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. இதுபோன்று, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் விநியோகம் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் தொடங்கியுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…