பொதுத்தேர்வு எழுதும் +2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கான திருப்பதல் தேர்வுகள் என்று சொல்லப்படும் முதல் ரிவிசன் டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தான் இந்த வினாத்தாள்கள் சமூகவலைதலங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனே அரையாண்டு தேர்வின் போது 9,10,மற்றும்+1,+2 ஆகிய வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் தேர்விற்கு முன்பே சமூகவலைதலங்களில் வெளியாகியது.இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் மேலும் தனி அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்த நிலையில் தற்போது தி கணிதம்,அறிவியல் பாடவினாத்தாள்கள் வெளியாகி உள்ளது. கணித தேர்வானது வரும் 13 தேதி +2க்கு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல் 10 வகுப்பிற்கு அறிவியல் மற்றும் கணித பாடத்திற்கான வினாத்தாள்களும் சமூகவலைதலங்களில் வெளியாகி உள்ளது.இவ்வாறு தேர்வு எழுதுவதற்கு முன்பே வினாத்தாள்கள் வெளியாகியதால் கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வினாத்தாள் வெளியாகியதை அடுத்து அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். வினாத்தாள்கள் இவ்வாறு தேர்விற்கு முன்னர் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தால் பின்னர் எதற்கு தேர்வு வினாத்தாள்களை மாணவர்களின் கையிலே கொடுத்து தேர்வு எழுத வைக்கலாமே என்று பொதுமக்கள் வசைபாடுகின்றனர்.
வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…