மானாமதுரைக்கு அருகே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மிளகனூர் கிராமத்தில் அரசு உயர் நிலை பள்ளி உள்ளது.இந்த பள்ளியில் 7 ஆசிரியர்கள் பணிபுரிகின்றன.அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றன.
இந்நிலையில் நேற்று உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புதிதாக நிகழ்ச்சி நடத்த முடிவெடுத்த ஆசிரியர்கள் அப்பள்ளியில் பயிலும் மாணவிகளில் சிறந்து விளங்கும் ஒருவரை ஒரு நாள் தலைமை ஆசிரியராக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளனர்.
இதன் காரணமாக படிப்பு ,விளையாட்டு ,பழக்கவழக்கம் ,ஒழுக்கம் ,பிறருக்கு உதவும் குணம் ஆகியவைகளில் சிறந்து விளங்கும் 10 -ம் வகுப்பை சேர்ந்த காவியா என்ற மாணவியை தேர்ந்தெடுத்துள்ளனர்.
பின்னர் ஒருநாள் தலைமை ஆசிரியராக தேர்வான காவ்யாவை பள்ளியின் தலைமை ஆசிரியரும் பிற ஆசிரியரும் இணைந்து தலைமை ஆசிரியர் இருக்கையில் அமரவைத்துள்ளனர்.
பின்னர் தலைமையாசிரியரின் பொறுப்புகள் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் காவ்யாவிற்கு எடுத்துரைத்துள்ளனர்.இதனை தொடர்ந்து காவ்யா பள்ளியின் முக்கிய கோப்புகளை பார்வையிட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து ஆசிரியர்களிடம் கலந்தாய்வு நடத்திய காவ்யா ,ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று ஆய்வு நடத்தியுள்ளார்.அப்போது மாணவர்களிடம் பேசிய அவர் அனைவரும் படிப்பு மற்றும் விளையாட்டில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
மேலும் தொடர்ந்து பள்ளியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.இந்நிலையில் ஒரு நாள் தலைமை ஆசிரியராக மாணவி செயல்பட்டது பிற மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்திருப்பதாக ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…