ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீதான வழக்கு -நாளை விசாரணை

Published by
Venu
  • பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
  • பன்னீர்செல்வம்  உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கை  நாளை ( பிப்ரவரி 4-ஆம் தேதி) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்து வருகிறார்.ஆனால் பிரிந்து சென்ற சமயத்தில்  ஓ.பன்னீர்செல்வம் அணி  சட்டசபையில்  முதலமைச்சர் பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தது.

அந்த நேரத்தில் முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, ஆறுகுட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், ஆர்.நட்ராஜ் ஆகிய 11 எம்.எல்.ஏ.க்கள் அரசு தலைமை கொறடாவின் உத்தரவை மீறி நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்கு அளித்தனர்.இந்த விவகாரம் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்,பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்று  தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் திமுக கொறடா சக்கரபாணி மற்றும் தங்க தமிழ்செல்வன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

ஆனால் இந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளதால், விரைந்து விசாரிக்க வேண்டும் என்று திமுக கொறடா சக்கரபாணி மற்றும் தங்கதமிழ்செல்வன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வழக்கை விரைவாக விசாரிக்க கோரி திமுக  மனுதாரரகள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் கோரிக்கை வைத்தார். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை நாளை (பிப்ரவரி 4-ஆம் தேதி) நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Published by
Venu

Recent Posts

ஆபரேஷன் சிந்தூர்: அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி என்ன பேசினார்?

ஆபரேஷன் சிந்தூர்: அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி என்ன பேசினார்?

டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…

2 minutes ago

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட ஆக்சியம் – 4 திட்டம்! காரணம் என்ன?

நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…

26 minutes ago

“விராட் கோலி இடத்திற்கு அவர் தான் சரியா இருப்பாரு”…பிசிசிஐ முடிவு செய்த அந்த வீரர்?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…

2 hours ago

நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

3 hours ago

கமேனியை எளிதாக கொலை செய்ய முடியும்! பரபரப்பை கிளப்பிவிட்ட டொனால்ட் ட்ரம்ப்!

வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…

3 hours ago

ஏர் இந்தியா விமான விபத்து : 700 கிராம் தங்கம், ரூ. 80,000 பணம் மீட்பு!

அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…

4 hours ago