பட்டாசு விபத்து.. உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி உதவி.!

Published by
murugan

காட்டுமன்னார்கோவில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் முதலமைச்சர் அறிவிப்பு.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி வட்டம் குருங்குடி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் ஏழு பெண்கள் உயிரிழந்தனர். மேலும்,  10 பேர் காயம் அடைந்துள்ளனர் என கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக முதல்வர் இந்த விபத்து குறித்து வெளியிட்ட அறிக்கையில், இந்த வெடி விபத்து செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும்  காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், இறந்தவரின் குடும்பத்தினரை  நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்ய தொழில்துறை அமைச்சர் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு அவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் முதல்வர் பொது நிவாரணநிதியிலிருந்து வழங்கப்படும், எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

Published by
murugan

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

10 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

10 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

10 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

11 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

11 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

14 hours ago