2 மாணவர்கள் யூடியூப்பில் வீடியோ பார்த்து ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி..!

Published by
murugan

காஞ்சிபுரம் மாவட்டம் கீழ் படப்பை கரசங்கால் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏடிஎம்மில் 2 வாலிபர்கள் கதவை பூட்டிக்கொண்டு இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்தபோது சிக்னல் மூலமாக மும்பை தலைமை அலுவலகத்திற்கு தகவல் சென்றது.
உடனே மும்பை அலுவலகத்தில் இருந்து ஓட்டேரி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஓட்டேரி மற்றும் மணிமங்கலம் காவல்துறை விரைந்து வந்து கொள்ளை அடிக்க முயற்சி செய்த இரண்டு மாணவர்களையும் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் இவர்கள் காஞ்சிபுரத்தைச் சார்ந்த இறையன்பு மற்றும் யோகேஷ் என தெரியவந்தது. இவர்கள் தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். மேலும் யூடியூப் சேனலில் ஏடிஎம்மை எப்படி கொள்ளை அடிக்கிறது  என வீடியோ பார்த்து கொள்ளை அடிக்க முயற்சி செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இதுபோன்று வேறு வங்கி கிளைகளில் எங்கேயாவது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறீர்களா  என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

11 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

11 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

12 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

12 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

14 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

15 hours ago