நாளை முதல்… ஆம்னி பேருந்துகளில் 2,000 நோட்டுகள் வாங்கப்படமாட்டாது! உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

செப்டம்பர் 29ம் தேதி (நாளை) முதல் ஆம்னி பேருந்துகளில் ரூ.2,000 நோட்டுகள் வாங்கப்படமாட்டாது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளை இன்றுக்குள் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என மத்திய அரசு கூறி இருந்த நிலையில், ஆம்னி பேருந்துகளில் வழக்கமாக 90 சதவீதம் ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் புக்கிங் நடைபெற்று வருகிறது.

இதில், 10% மட்டுமே பயணிகள் கடைசி நேரத்தில் டிக்கெட் புக்கிங் செய்ய நேரில் வந்து புக்கிங் செய்கின்றனர். இந்நிலையில், இன்று முதல் மத்திய அரசின் கெடு நிறைவடைந்த நிலையில். நாளை 29ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதிலும் அனைத்து ஆம்னி பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டை பயணிகள் கொடுத்து டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டாம் என்றும் தொடர்ந்து உங்கள் நல் ஆதரவையும், பயணத்தையும், எங்கள் அனைத்து ஆம்னி பேருந்துகளில் தொடர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 2016 நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்டன 2,000 ரூபாய் நோட்டுகள் கடந்த மே மாதம் 19ம் தேதி ரிசர்வ் வங்கி திடீரென திரும்ப பெறுவதாக அறிவித்தது. அதன்படி, செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்கு பிறகு, தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. 2,000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. பொதுமக்களும், தங்களது 2000 நோட்டுகளை பல்வேறு இடங்களில் கொடுத்து மாற்றி வந்தனர்.

இந்த நிலையில், 2,000 நோட்டும் மாற்றும் அவகாசம் முடிவடைய உள்ள நிலையில், நாளை முதல் ஆம்னி பேருந்துகளில் ரூ.2,000 நோட்டுகள் வாங்கப்படமாட்டாது என உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, இன்று முதல் 2000 ரூபாய் நோட்டுகள் பெட்ரோல் பங்குகளில் வாங்கப்பட மாட்டாது என்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றுங்கள் எனவும் பெட்ரோல் பங்குகள் சங்கம் அறிவித்தது. இதுபோன்று, ஆன்லைலில் பொருட்கள் வாங்கும் தளம் கடந்த செப். 19ம் தேதியோடு கேஷ் ஆன் டெலிவெரி எனப்படும் பணம் பெற்று பொருள் வாங்கும் நடைமுறையில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்குவதை நிறுத்திவிட்டது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஆந்திராவில் பணி நேரம் 10 மணி நேரமாக நீட்டிப்பு! வலுக்கும் எதிர்ப்புகள்.!!

ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…

4 hours ago

மகாராஷ்டிரா தேர்தல்: ”வாக்குச் சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை வெளியீடுக” – ராகுல் காந்தி வலியுறுத்தல்.!

மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து…

4 hours ago

டெஸ்லா காரை விற்க போகும் டிரம்ப்.? வெள்ளை மாளிகையில் நிறுத்தப்பட்ட சிகப்பு கார்.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து…

5 hours ago

“நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு கிளாம்பாக்கமே சாட்சி”- எடப்பாடி பழனிசாமி கண்டனம்.!

சென்னை :  கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த…

6 hours ago

நகைக்கடன் விதிகளில் மாற்றம்! புதிய விதிமுறைகள் என்னென்ன? விவரித்த எம்.பி. சு.வெங்கடேசன்.!

சென்னை : தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்ட…

6 hours ago

”கொரோனா வந்தால் சமாளிக்கத் தயார்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

சென்னை : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்…

7 hours ago