தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ,234 சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது தேமுதிக.
இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. அண்மையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், தேமுதிகவின் நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் தலைமையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும் ஆலோசனை மேற்கொண்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.அந்த அறிக்கையில் 234 சட்டமன்ற தொகுதிகளின், தேமுதிக பொறுப்பாளர்கள், முதல் கட்டமாக, இன்று நியமனம் செய்யப்படுகிறார்கள்.இவர்களுக்கு மாவட்ட, ஒன்றிய, பகுதி, பேரூர், வார்டு, வட்ட, ஊராட்சி,கிளைக் கழக,சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…