டெல்லி பெண்ணை வன்கொடுமை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை.!

Published by
murugan
  • கடந்த 2018 -ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் கும்பகோணத்தில் தனியார் வங்கியின் பயிற்சிக்காக வந்துள்ளார்.
  • அப்போது அப்பெண்ணை வன்கொடுமை செய்த  தினேஷ் , புருஷோத்தமன், வசந்த் ,மற்றும் அன்பரசன் ஆகிய நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி எழிலரசி உத்தரவிட்டார்.

கடந்த 2018 -ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் கும்பகோணத்தில் தனியார் வங்கியின் பயிற்சிக்காக வந்துள்ளார். அவர் இரவு நேரத்தில் கும்பகோணம் ரயில்வே நிலையத்திற்க்கு வந்ததால் ஆட்டோ மூலம் பெண்கள் விடுதிக்கு செல்ல அவர் முடிவு செய்தார்.

அதனால் விடுதிக்கு செல்ல ஆட்டோ ஒன்றை அழைத்து உள்ளார். அப்போது குருமூர்த்தி என்ற ஆட்டோ டிரைவர் அப்பெண்ணை ஆட்டோவில் அழைத்துக்கொண்டு கும்பகோணத்தை சுற்றி சுற்றி வந்துள்ளார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தால் அப்பெண் தனது தோழியிடம் போன் செய்து ரயில்வே நிலையத்தில் இருந்து விடுதிக்கு எவ்வளவு தூரம் என கேட்டுள்ளார்.

உடனே அப்பெண் ரயில்வே நிலையத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர்தான் என கூறியுள்ளார். இதை தொடர்ந்து ஆட்டோ டிரைவரிடம் இதைப்பற்றி அப்பெண் கூறியுள்ளார் உடனே ஆட்டோ டிரைவர் அப்பெண்ணை கீழே இறக்கி விட்டு சென்று விட்டார். இரவு நேரம் என்பதால் அங்கு வந்த இரண்டு பேரிடம் அந்தப் பெண் விடுதியை  பற்றி விசாரித்துள்ளார்.

அந்த இருவரும் குடிபோதையில் இருந்ததால் அப்பெண்ணை பலவந்தமாக தூக்கிக் கொண்டு சென்று வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அவர்கள் மட்டுமில்லாமல் அவருடன் சேர்ந்து மற்றோரு இரண்டு பேரும் சேர்ந்து நான்கு பேரும் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த வழக்கு தஞ்சை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் , அப்பெண்ணை வன்கொடுமை செய்த  தினேஷ் , புருஷோத்தமன், வசந்த் ,மற்றும் அன்பரசன் ஆகிய நான்கு பேருக்கும் ஆயுள் முழுவதும் சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி எழிலரசி உத்தரவிட்டார்.மேலும் ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்திக்கு 7 ஆண்டு சிறை என மகளிர் தஞ்சை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Published by
murugan

Recent Posts

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

13 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

31 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

55 minutes ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

1 hour ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

15 hours ago