நிவர் புயல் கரையை கடக்க மேலும் 4 மணிநேரம் ஆகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி வடக்கே பலத்த சூறைக்காற்றுடன் மையப்பகுதியை கடந்து வருகிறது. புதுச்சேரி 20 கி.மீ.., சென்னைக்கு 100 கி.மீ தொலைவில் புயலானது கரையை கடந்து வருகிறது. புயல் கரையை கடந்து வருவதால் கடலோர பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், புயல் கரையை கடக்க மேலும் 3 முதல் 4 மணிநேரம் ஆகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் நேரம் தொடர்ந்து மாற்றமடைந்து வருகிறது. புயல் கரையை கடக்கும் எதிர்திசையில் காற்று வீசுவதால், நிவர் புயல் முழுவதும் கரையை கடக்க தாமதம் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரியின் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரம் இடியுடன் கூடிய தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், அரியலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், காரைக்கால், திருச்சி, திருப்பத்தூரில் அடுத்த 3 மணிநேரம் மிதமான மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…